தாராபுரம், நவ.16- செங்கொடி இயக்கத்தின் மகத்தான தியா கத் தலைவர் என்.சங்கரய்யா மறைவுக்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் அனைத்துக் கட்சியினர், பொது மக்கள் திரண்டு வீரவணக்கம் செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்.வெங்கட்ராமன் தலைமையில் தாராபு ரம் அண்ணாசிலை முன்பு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இரங்கல் கூட்டத்தில் தமிழ் நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு சங்க ரய்யா குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன் றிய பெருந்தலைவர் எஸ்.வி.செந்தில் குமார், தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் மின்னல், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் முருகானந்தம், திமுக நகர துணைச்செயலாளர் கமலக்கண் ணன், சிபிஎம் தாலுகாச் செயலாளர் என்.கனக ராஜ், திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு கட்சி களை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். முன்னதாக தாரா புரம் கட்சி அலுவலகத்திலிருந்து அண்ணா சிலை வரை ஊர்வலம் நடைபெற்றது.
அவிநாசி:
அதேபோல அவிநாசியில் அரசியல் கட்சி கள் சார்பில் என்.சங்கரய்யா இரங்கல் பேரணி பயணியர் விடுதி முன்பு துவங்கி பழைய பேருந்து நிலையம் வழியாக சேவூர் சாலை செங்காடு திடல் வந்தடைந்தது. அங்கு என். சங்கரய்யா உருவப்படத்துக்கு மாலை அணி வித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இத னைத் தொடர்ந்து இரங்கல் கூட்டம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன் சிலர் முத்துசாமி தலைமையில் நடைபெற் றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வெங்கடா சலம், பழனிசாமி மற்றும் ஒன்றியக்குழு உறுப் பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் கலந்து கொண்டனர். மேலும் திராவிட முன்னேற்றக் கழகம் சார் பில் திராவிட வசந்த் பொன்னுசாமி, அதிமுக சார்பில் ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன், மதிமுக சார்பில் சுப்பிரமணி, பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சண்முகம், முத்து சாமி, காங்கிரஸ் கட்சி சார்பில் லட்சுமணசாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ராஜ்குமார் அரசு ஓய்வூதிய சங்கத்தின் சார் பில் நடராஜ், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அப்துல் மஜீத் மம்முசா உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல புதனன்று திருமுருகன் பூண்டி நகராட்சி கிளைகள் சார்பி லும், கிராமப்புற கிளைகள் சார்பிலும் அஞ் சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
தெற்கு ஒன்றியம்
திருப்பூர் தெற்கு ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் புதனன்று மாலை என்.சங்க ரய்யா மறைவிற்கு அனைத்து கட்சி சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு கிளை செயலாளர் கே.கருப் புசாமி தலைமையில் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவரும், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினருமான க.கணேசன், நிலவள வங்கி யின் முன்னாள் இயக்குனர் கே.ஈஸ்வரன், திமுக சார்பாக செல்வம் ஆதவன் கேசவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பழனி சாமி, காங்கிரஸ் சார்பாக சுப்பிரமணி, மதி முக சார்பாக முத்துசாமி, மக்கள் நீதிமய்யம் சார்பாக பழனிசாமி ஆகியோர் இரங்கல் உரை யாற்றினர். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட் சியின் கிளை செயலாளர்களும் உறுப்பினர் களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
பல்லகவுண்டம்பாளையம்
ஊத்துக்குளி தாலுக்கா, பல்லகவுண்டன் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் அனைத்துக் கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி வியாழனன்று மார்க்சிஸ்ட் கட்சி தாலுக்கா குழு உறுப்பினர் க.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுக்கா செயலாளர் எஸ்.கே.கொளந்த சாமி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.கந்தசாமி, தாலுக்கா கமிட்டி உறுப்பி னர் வி.காமராஜ், மாதர் கிளை செயலாளர் மீராலட்சுமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் பாலசுப்ரமணியம், காங்கிரஸ் சார்பில் பொன்னுசாமி, அதிமுக சார்பில் ஏ.பி.சிவக்கு மார், திமுக சார்பில் விஜய் என்கிற மோகன சுந்தரம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சீனிவாச மூர்த்தி ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர். அனைத்து கட்சி நிர்வாகி களும், மாதர் சங்கம், தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களும் திரளாக கலந்து கொண்ட னர். அதேபோல் ஊத்துக்குளி தாலுக்கா, ச. பெரியபாளையம் கிளை சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி ச.பெரியபாளையம் பேருந்து நிறுத் தம் அருகில் புதனன்று கிளை செயலாளர் ஆ. மேகநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலா ளர் ஈஸ்வரன், தமுஎகச சார்பில் அன்பழகன், சிஐடியு சார்பில் பொன்னுசாமி ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் அனைத்து கட்சி நிர்வாகிகளும், மாதர் சங்கத் தினரும் திரளாக கலந்து கொண்டனர்.
உடுமலை ஒன்றியம்
உடுமலை ஒன்றிய பகுதிகளில் குரல் குட்டை, பள்ளபாளையம், ஜல்லிபட்டி, கண் ணமநாயக்கனூர், எரிசினம்பட்டி, செல்லப் பம்பாளையம், தேவனூர்புதூர், கொடிங்கி யம், சாலையூர், பெரியவாளவாடி சர்க்கார்பு தூர், பொன்னாலம்மன் சோலை உட்பட பல் வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட்கட்சி கிளைக ளில் சங்கரய்யா நினைவைப் போற்றி புகழஞ் சலிக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் உடு மலை ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் கள் உட்பட வாலிபர்சங்க, தொழிற்சங்க, வி. தொ.சங்க, விவசாயசங்க, மாதர்சங்க நிர்வா கிகள் ஏராளமானோர் பங்கேற்று வீரவணக் கம் செலுத்தி அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
வெள்ளகோவில்
வெள்ளகோவில் மூத்ததோழர் எஸ்.என். பழனிச்சாமி தலைமையில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராசி முத்துக்குமார், நகரச் செயலாளர் திமுக சபரி முருகானந்தம் மற்றும் காங்கிரஸ் எஸ்.கே.ஆர்.நடராஜ் திராவிடக் கழகத்திலிருந்து மணிகண்டன், மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் திரு வேங்கடசாமி, தாலுகா கமிட்டி உறுப்பினர் கள் பழனிச்சாமி, ராதாகிருஷ்ணன் கிளைச் செயலாளர்கள் லோகேஸ்வரன், கருப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர். இதுபோல் பொங்கலூரில் ஊராட்சி ஒன் றிய அலுவலகம் முன்பாக வியாழனன்று அனைத்துக் கட்சிகள் சார்பில் என்.சங்க ரய்யா நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற் றது. இதில் ஒன்றியச் செயலாளர் பாலன் உள் பட பல்வேறு கட்சியினர் பங்கேற்று சங்கரய் யாவுக்கு புகழஞ்சலி செலுத்தினர். வேலம்பாளையம் நகரில் அனுப்பர்பா ளையத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் ச.நந்தகோபால், திமுக வேலம் பாளையம் செயலாளர் ராமதாஸ், சிபிஐ மண் டல செயலாளர் எஸ்.செல்வராஜ், அதிமுக பகுதிக் கழகச் செயலாளர் சுப்பிரமணி, தபெ திக மாநகரத் தலைவர் சண். முத்துக்குமார், திவிக மாவட்டச் செயலாளர் முகில் ராசு, கொமதேக சார்பில் வி.சி.மணி உள்பட பல் வேறு கட்சியினர் பங்கேற்று இரங்கல் தெரி வித்தனர்.