நாமக்கல், அக்.18- நாமக்கல் அருகே காவிரி குடிநீரை தினந் தோறும் வழங்க மல்லசமுத்திரம் பேரூராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் பேரூராட்சி, 1 ஆவது வார்டு அம்மாபட்டியில் 80க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் காவிரி குடிநீர் 15 நாளுக்கு ஒரு முறை இரவு நேரத்தில் விநியோகிக்கப்படு கிறது. இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படு கிறது. மேலும், குடிநீரை விலைக்கு வாங்கு கிறார்கள். எனவே, தினந்தோறும் காவிரி குடி நீரை விநியோகம் செய்ய பேரூராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.