உடுமலை, மார்ச் 7 - உடுமலை குடிநீர் வடிகால் வாரிய நிர்வா கம் குடிநீர் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவ தாக கூறி செவ்வாயன்று திண்டுக்கல் - பொள் ளாச்சி தேசிய நெடுச்சாலையில் பொது மக் கள் சாலை மறியல் போராட்டம் ஈடுபட் டனர். உடுமலை தாலுகா, திருமூர்த்தி அணை பூலாங்கிணறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் முக்கோணம் பகுதியில் தரை மட்ட தொட்டி யிலிருந்து அந்தியூர், பூலாங்கிணறு மற்றும் முக்கோணம் பகுதிகளுக்கு குடிநீர் விநியோ கம் செய்யப்பட்டு வந்தது. அதிகாரிகளின் அலட்சியத்தால் இப்பகுதிகளுக்கு கடந்த ஒரு மாதமாக பூலங்கிணறு கூட்டுக்குடிநீர் திட் டத்தில் முறையாக தண்ணீர் வருவது இல்லை. அதிகாரிகளிடம் கேட்ட போது அணை பகுதியிலிருந்து வரும் குடிநீர் குழாய்களில் வேலை நடப்பதாக சொல்லப் படுகிறது. ஆனால் அங்கு வேலை நடப்பதாக தெரியவில்லை. இது போன்ற குடிநீர் வடி கால் வாரிய அதிகாரிகளின் அலட்சிய போக் கால் குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் தேசிய நெடுச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, போராட்டம் நடை பெற்ற இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடனடி யாக முக்கோணம் பகுதிக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து போராட்டம் முடி வுக்கு வந்தது.