திருப்பூர், ஜன. 8 - திருப்பூர் மாநகராட்சி 57ஆவது வார்டு வள்ளலார் நகரில் குடிநீர் குழாய் சாக்கடைக்குள் செல்வதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருப்பூர் மாநகர், வள்ளலார் நகரில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் சாக்கடைக்குள் செல்கிறது. இது அப்பகுதி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த திருக்குமரன் நகர் பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கச் செயலாளர் சு. வெங்கடேஷ் கூறியதாவது: எங்கள் பகுதியில் இது தொடர் பாக பலரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை. குடிநீர் குழாயில் லேசான சேதம் ஏற்பட்டால், சாக்கடை நீர் குடிநீருடன் கலந்துவிடும் அபாயம் உள்ளது. மாநகராட்சியின் குடிநீரை நம்பி வாழும் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதேபோல் குடிநீர் குழாய் திறப்புக் கான கேட் வால்வு தொட்டி தண்ணீர் நிரம்பி வழிகிறது. அதி காலை நேரத்தில் இப்பகுதியில் செல்லும் முதியவர்கள் இயற்கை உபாதைக்கு பின்பு கேட் வால்வு தொட்டியை பயன் படுத்துவதால், பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கும் சூழல் உள்ளது. உடனடியாக கேட் வால்வு தொட்டியை சுத்தம் செய்து அதற்கு மூடியிட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் குடிநீர் குழாய் சாக்கடைக் குள் செல்வதை அப்புறப்படுத்தி உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்றார்.