districts

img

குடிநீர் வரவில்லை: மக்கள் சாலை மறியல்

சேலம், நவ.22- மகுடஞ்சாவடி அருகே காவிரி குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை எனக்கூறி, அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றி யத்திற்குட்பட்ட ஆ.புதூர் ஊராட்சியிலுள்ள 9  வார்டுகளில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக் கள் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங் களாக இப்பகுதியில் காவிரி குடிநீர் முறை யாக விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து தெரிவித்தும், ஊராட்சி நிர்வா கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதனைக் கண் டித்து, அப்பகுதி பொதுமக்கள் வியாழ னன்று ஆ.புதூர் - இளம்பிள்ளை செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகுடஞ்சாவடி காவல் துறையினர் குடிநீர் கிடைக்க உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த னர்.