districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மதக்கலவரத்தை தூண்ட பாஜக முயற்சி: மக்கள் அச்சம்

நாமக்கல், நவ.3- குமாரபாளையத்தில் நகராட்சி சார்பில் கல்லறை தோட்டம் அமைக்க திட்டமிட்ட நிலையில், மதக்கலவ ரத்தை தூண்டும் வகையில் அத்திட் டத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் நகராட்சி 33 வார்டுகளை கொண்டதாகும். நகராட்சி நிர்வாகத் தின் மூலம் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பின் மூலம் எரிவாயு மயா னம் அமைக்கப்பட்டு, சடலங்களை புதைப்பதற்கு தடை விதித்ததுடன், அனைவரும் எரிவாயு மயானத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரி விக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாரபாளையம் பகுதியில் ஆர்சி கிறிஸ் தவர்கள் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதால், அவர்களுக்கு மயான வசதி ஏற்படுத் திக் கொடுப்பதற்காக கல்லறை தோட்டம் அமைக்க நகர்மன்ற கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படை யில், சுமார் 5 லட்சம் ரூபாய் செலவில் எரிவாயு மயான பகுதியில் கல்லறை  தோட்டம் அமைக்க பணிகள் துவங்கி யது. அப்போது, பாரதிய ஜனதா கட்சி யினர் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஜேசிபி இயந்திரத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கல்லறை தோட்டம் அமைக்க நக ராட்சி நிர்வாகம் நிறைவேற்றிய தீர்மா னத்தை ரத்து செய்யும் வரை போராட் டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.  அமைதியாக உள்ள மக்களிடத்தில் திட் டமிட்டே இதுபோன்ற சர்ச்சையை உருவாக்கி குமாரபாளையம் பகுதி யில் மதக்கலவரம் ஏற்பட்டு விடுமோ?  என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதனிடையே, தக வலறிந்து வந்த நகராட்சி ஆணையா ளர் சரவணன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை  நடத்தி,அனைவரையும் கலையச் செய்தனர்.

தெருநாய்கள் கடித்து சிறுமி படுகாயம்

திருப்பூர், நவ.3– திருப்பூரில் தெருநாய்கள் கடித்ததில் படுகாயம் அடைந்த இரண்டு வயது சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூர் - மங்கலம் சாலை, பெரியாண்டிபாளையம் பிரிவு  பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். கட்டட தொழிலாளி யான இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வியாழனன்று மாலை இவரது இரண்டு வயது மகள் நைனிகா வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப் போது, அங்கிருந்த ஆறு தெருநாய்கள் சிறுமியை கடித்து குத றின. இதில் படுகாயமடைந்த சிறுமி திருப்பூர் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனி டையே திருப்பூர் மாநகரில் தெருநாய்கள் தொல்லை அதிக ரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று  பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் மாநகராட்சி கூட்டங்களிலும் மாமன்ற உறுப்பி னர்கள் வலியுறுத்துகின்றனர். எனினும் நாய்கள் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அறுவை சிகிச்சை செய்வது தவிர்த்து வேறு வழியில்லை என்று அதிகாரிகள் கூறி வருகின் றனர். அதேசமயம், சிறுமி தெருநாய்க்கடிக்கு ஆளான நிலை யில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க எப்படியாவது நாய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு நிர்வா கம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

கொலை வழக்கு: 6 பேர் சரண்

கோவை, நவ.3- தஞ்சாவூர், திருக்காட் டுப்பள்ளி அடுத்துள்ள திருச் சென்னம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் வி.எஸ்.எல். குமார் என்கிற முருகையன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, குமாருக்கும், அவரது முன் னாள் நண்பர் பவுசு செந்தி லுக்கும் இடையே மோதல் நிலவி வந்ததாக கூறப்படுகி றது. இந்நிலையில், திருக் காட்டுப்பள்ளியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு கும்பல் சரமாரி யாக குமாரை வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமாரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், பவுசு செந்தில் உட் பட 6 பேர் மீது கொலை உள் ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்து, தலை மறைவாக இருந்தவர்களை தேடி வந்தனர். இந்த நிலை யில், தலைமறைவாக இருந்த 6 பேரும் கோவை புறநகர் சூலூர் குற்றவியல் நீதிமன் றத்தில் நீதிபதி ரூபா முன்னி லையில் ஆஜராகினார். இவர்கள் 6 பேருக்கும் 15 நாட் கள் நீதிமன்ற காவல் வழங் கப்பட்டுள்ளது.

111 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் திருப்பூர் மாவட்ட சமூகநலத் துறை தகவல்

திருப்பூர், நவ.3– திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 10 மாத காலத்தில் 111 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதென மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதாதேவி தெரி வித்துள்ளார். திருப்பூர் - அவிநாசி சாலையிலுள்ள தனியார் விடுதியில் சமூக நலத்துறை, தோழமை அமைப்பு மற்றும் யுனிசெப் சார்பில் வியாழனன்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஊட கவியலாளர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிகையாளர் மணி கலந்து கொண்டு குழந்தை களுக்கு எதிரான குற்றங்களின்போது ஊடகங்கள் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பல்வேறு ஆலோச னைகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதா தேவி, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 111 குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டதோடு, 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும், ஆறு வழக்குகள் பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள், பெண்களுக்கு எதி ரான வன்முறைகள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளி யிடும்போது, அவர்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு  குறித்து இலவச தொடர்பு எண்ணையும் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.