உதகையில் மக்கள் குறைதீர் கூட்டம்
உதகையில் மக்கள் குறைதீர் கூட்டம் உதகை,மார்ச் 4- உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடை பெற்றது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுதிறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 195 மனுக்களை பெறப்பட்டன. இக்கூட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் தனது இரு மகன்களை ராணுவப் பணிக்கு அனுப்பிய பெற்றோரை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசினால் வழங்கப்படும் 12 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கத்தை படைவீரர்களின் தாயாரான லட்சுமி என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கி பாராட்டினார். மேலும் ரவி என்ற முன்னாள் படைவீரருக்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து வீடு கட்டும் மானியத்தொகை ரூபாய். 1லட்சம் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. பின்னர், அவர் அந்த காசோலையை, மாணவர்கள் போட்டித்தேர்வுக்கு பயிற்சிகளை மேம்படுத்தும் வகையில் உதகை அறிவுசார் மையத்துக்கு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப் புத்திட்டம்) கல்பனா, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் (பொ) இந்திரகுமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் கைது
துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் கைது நாமக்கல்,மார்ச் 4- மது போதையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து துப்பாக்கியை பறி முதல் செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பூலக்காடு பகுதியில் வசிப்பவர் பிரதாப்குமார். இவர் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் தகவல் விசாரணை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் சனியன்று இரவு மது அருந்திவிட்டு கையில் துப்பாக்கியுடன் வந்து அப்பகுதி யில் உள்ள பொதுமக்களிடம் சுட்டுக் கொன்று விடுவேன் என்று துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், குமாரபா ளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரி டம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். விசாரணை யில் அந்த துப்பாக்கியானது விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் ஏர் கன் வகையைச் சார்ந்தது என தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக் களை துப்பாக்கியை வைத்து மிரட்டியதற்காக கைது செய் யப்பட்டு குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
கடன் தொல்லை: கையை அறுத்துக்கொண்ட நபர்
கோவை, மார்ச் 4- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு மனு கொடுக்க வந்த நபர், கடன் தொல்லையால் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறு வது வழக்கம். இம்முகாமிற்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மனு அளிக்க வருகை தரு வர். அந்த வகையில், கோவை பி.என். புதூர் பகுதியைச் சேர்ந்த நிவாஸன் என்பவர், மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலு வலகம் வந்தார். அப்போது, கொரோனா காலத்தில் வாங்கிய சிறு கடனை அடைப்பதற்காக, மேலும் கடன் வாங்கி கட்ட முடியாமல் தவித்து வருகிறேன். கடனால், வாழ்வா தாரம் முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டது. இந்த கடனை அடைக்க போதிய வருமான மும் இல்லை. எனவே, இதனை உடனடியாக சரி செய்ய, தன் தந்தையின் சொத்தை முழு மையாக தர வேண்டும் எனவும், தன் தந்தை இறந்து ஏழு வருடங்கள் ஆகி விட்டதாக கூறி கொண்டே, மாவட்ட ஆட்சியர் அலுவ லத்தில் நுழைவாயிலில் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை உடனடியாக தடுத்து நிறுத்தி பந்தய சாலை காவல்நிலை யத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்ற னர்.
உரிமம் காலாவதியான டாஸ்மாக் பாரை மூடுவதில் என்ன சிக்கல்?
திருப்பூர், மார்ச் 4- கொங்கு மெயின் ரோடு பகுதியில் உரிமம் காலாவதியான பிறகும் பார் செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்ப டுத்தியும், பார் மூடப்படாமல் உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, திருப்பூர் மாநகர் கொங்கு மெயின் ரோடு இஎஸ்ஐ மருத்துவமனை அருகில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் வசித்து வருகி றோம். எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை(கடை எண் 1909) மூடக் கோரி நீண்ட காலமாக போராடி வருகிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சி யரை நேரில் சந்தித்து பாரை மூட வலியுறுத்தி னோம். இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கடை இரண்டு மாதத்திற்குள் மூடப்படும் என சிறிய அறிவிப்பு பலகை கடை யின் முன் வைக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளே கடை முன் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை பாரின் உரிமையாளர் அகற்றி விட்டார். இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகத் திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த டாஸ்மாக் கடை யில் உள்ள பாரின் உரிமமும் கடந்த மாதமே காலாவதி ஆகிவிட்டது. இருந்தும் பார் இயங்கி வருகிறது. இதை உடனடியாக மூட வேண்டும் என மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தி லும் மனு அளித்துள்ளோம். இப்படி சட்ட விரோதமாக நடத்தப்படும் பாரை மூடுவ தில் மாவட்ட நிர்வாகத்திற்கு என்ன சிக்கல் உள்ளது என்பது புரியவில்லை. மக்களுக்கு இடையூறாக உள்ள இந்த பாரை உடனடியாக மூட வேண்டும். மேலும், மருத்துவமனை அரு கில் உள்ள இந்த டாஸ்மாக்கை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம்: மேயர் ந.தினேஷ்குமார் ஆய்வு
திருப்பூர், மார்ச் 4- திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கலை ஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலை யத்தில் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டு, முறையாக கழிவறை களை சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் கூடு தல் குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கலை ஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத் திற்கு கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நகர்ப்புற பேருந்துகள் தினசரி வந்து செல்கின்றன. பல் லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு அடிப் படை வசதிகள் குறித்து திங்களன்று திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொது மக்களை சந்தித்து பேருந்து நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார். கோடைக்காலம் என்பதால் நிழலுக்கான ஏற்பாடுகள் அமைத்து தரவேண் டும். சரியான நேரத்திற்கு பேருந்துகள் வரு வதை உறுதி செய்ய வேண்டும். பேருந்துக ளுக்கான அட்டவணையை பேருந்து நிலை யத்தில் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்துள்ளனர். மேலும், பேருந்து நிலை யத்தில் உள்ள கழிவறைகளில் பணம் கொடுத் தாலும் ரசீது கொடுப்பதில்லை, அதற்கேற் றவாறு சுகாதாரமாக இல்லை எனக் குற்றம் சாட்டினர். இதைதொடர்ந்து கழிவறையில் ஆய்வு மேற்கொண்ட மேயர் சுத்தம் செய்யப்படா மல் இருப்பதை கண்டு அதிகாரிகளை கண் டித்தார். மேலும் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் எனவும், வரும் பொது மக்களிடம் பணம் வசூலிக்கும் போது அதற்கான ரசீதை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், பேருந்து நிலையத்தில் மூன்று பக்கங்களில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் ஒரு பக்கத்தில் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் வகையில் செய் யப்பட்டிருந்தது. மற்ற இரண்டு பகுதிகளில் பழுதான குழாய்களை சரி செய்து குடிநீர் விநி யோகம் செய்ய வேண்டும். கோடை காலம் என்பதால் மேற்கொண்டு குடிநீர் தொட்டிகள் அமைத்து தர வேண்டும் என உத்தரவிட் டார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நகைகளை மீட்டுத்தரக் கோரி மனு
நகைகளை மீட்டுத்தரக் கோரி மனு ஈரோடு, மார்ச் 4- விவசாயிகள் அடமானம் வைத்த நகைகளை தமிழ்நாடு கிராம வங்கி கிளை மேலாளர் கையாடல் செய்த நிலையில், நகைகளை மீட்டுத்தர மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தாசப்பக வுண்டன்புதூரில் தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வருகி றது. இதில் விவசாயிகள் உள்ளிட்டோர் நகைகளை அடமா னம் வைத்து கடன் பெற்றுள்ளனர். அவ்வாறு அடமானம் வைத்த தங்கள் நகைகளைத் திருப்பிக் கேட்டனர். அப் போது வங்கியின் கிளை மேலாளர் அடமானம் வைத்த நகை களை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கடந்த 2022 செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆய்வில் சுமார் 2763.300 கிராம் நகைகளை கிளை மேலாளர் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், வங்கியின் மண்டல மேலாளரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பிறகு மேற்படி நகைகள் முத்தூட் பைனான்ஸ், மணப்புரம், கொசமட் டம் நிதி நிறுவங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றை மீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மேற்படி நிறுவ னங்கள் ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கள் நகைகளை மீட்டுத்தர வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு விவ சாயிகளின் நகைகளை மீட்டுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.எம்.முனுசாமி தலைமையில் மனு அளித்தனர்.
மோடி சுட்ட வடை
கோவை, மார்ச். 4- பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாக கூறி, கோவையில், திமுகவினர் வடை சுட்டு நூதன பிரச்சாரம் பொதுமக் களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நால் ரோட்டில் திமுகவினர் வடை சுட்டு வழங் கியதுடன், பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாகவும், அறிவித்த எந்த திட்டங்க ளையும் செயல்படுத்தவில்லை என கூறி பிரசாரம் செய்தனர். சாலையோரத்தில் திமு கவினரால் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேன ரில் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சி யில் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட நதிகள் இணைப்பு உள்ளிட்ட 15 திட்டங்களை பட்டியலிட்டு விமர்சனம் செய்திருந்தனர். திமுகவினரின் வடை சுட்டு பொதுமக்க ளுக்கு வழங்கும் வினோத பிரச்சாரம் குறித்த வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.