ஈரோடு, ஜன. 17- கடம்பூர் மலை, காடட்டியில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா நடைபெற் றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட னர். ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலை யில் மலைவாழ் இளைஞர் சங்கம் சார் பில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோருக்கான விளை யாட்டு போட்டிகள் நடைபெற்றன. மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினரும், திங்களுர் ஊராட்சி மன்ற உறுப்பினருமான எம்.மாதே வப்பா நிகழ்விற்கு தலைமை ஏற்றார். இதில், மூத்த தோழர் கே.துரைராஜ், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுரா மன், வாலிபர் சங்க நிர்வாகிகள் ரங்க சாமி, அஜித் குமார், மாதர் சங்க நிர்வாகி கள் தாயாளம்மாள், பழனியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலையில் ஏ.எம்.காதர் விடியல் கலைக்குழுவின் கரகாட்டம், தப்பாட் டம், பாடல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றன. பரிசளிப்பு விழாவினைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் மலைவாழ் மக்கள் சங்க தலை வரும், அரூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான டில்லி பாபு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.துரைசாமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.