திருப்பூர், ஆக. 17 – திருப்பூர் குமரானந்தபுரத்தில் இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் பிடல் சிலம்ப பயிற்சி பள்ளி இணைந்து 76ஆவது சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழாவை நடத்தினர். குமரானந்தபுரம் காமாட்சியம்மன் கோயில் முன்பாக தோழர் பி.வெங்கடா சலம் நினைவுத் திடலில் செவ்வாயன்று இவ்விழா நடைபெற்றது. இவ்விழாவில் ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. காலையில் பெண்கள் கோலப்போட்டியை மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னர் ஆர்.மைதிலி தொடக்கி வைத்தார். தேசியக் கொடியை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் ஏற்றி வைத்தார். வாலிபர் சங்க கொடியை வாலிபர் சங்க தெற்கு கிளைச் செயலா ளர் பி.மெய்யப்பன் ஏற்றி வைத்தார். வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் என். சந்துரு உறுதிமொழி வாசிக்க அனைவ ரும் உறுதி ஏற்றனர். விளையாட்டுப் போட்டியை வடக்கு மாநகரத் தலைவர் சே.கண்ணன் துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், 22 ஆவது வார்டு கவுன்சிலர் வி.ராதாகி ருஷ்ணன், 21ஆவது வார்டு கவுன்சிலர் கே.பத்மாவதி, திமுக வடக்கு மாவட்ட அவைத் தலைவர் க.நடராஜன் உள்பட அரசியல் கட்சி நிர்வாகிகள் வாழ்த்தி னர். தெற்கு கிளைத் தலைவர் எம்.நவீன் குமார் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. கிளைப் பொருளாளர் விவேக் வரவேற்றார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரத்த தானம் செய்த 36 பேருக்கு திருப்பூர் ஸ்ரீ குமரன் மருத்துவமனை மருத்துவர் எஸ்.செந் தில்குமரன் பாராட்டி கேடயங்கள் வழங் கினார். வாலிபர் சங்க தெற்கு கிளை துணைச் செயலாளர் வி.ராஜ்குமார் நன்றி கூறினார்.