districts

img

பாசிச சக்திகளை விரட்டுவோம் - மாநில உரிமைகளை பாதுகாப்போம்

கோவை, ஜன.17–  மக்கள் ஒற்றுமையை வலுப் படுத்தி, மாநில உரிமைகளை பாது காப்போம், பாசிச சக்திகளை நாட்டை  விட்டு விரட்டுவோம் என்கிற முழக்கத் தோடு வாலிபர் சங்கத்தின் பொங்கல்  விழா கோவை மாவட்டம் முழுவதும்  எழுச்சியோடு நடத்தப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் மக்கள் ஒற்றுமை பொங்கல்  விழா கோவை மாவட்டத்தில் ஐம்பதுக் கும் மேற்பட்ட இடங்களில் உற்சாக மாக நடைபெற்றது.  அனைவருக்கும் கல்வி, வேலை  என்கிற முழக்கத்தோடு களத்தில் இயங் கும் வாலிபர் சங்கம், தமிழர்களின் பண் பாட்டு விழாவான பொங்கல் விழாவை  வெகு விமர்சையோடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு பாசிச  சக்திகளை நாட்டை விட்டு விரட்டு வோம், மக்கள் ஒற்றுமையை வலுப் படுத்துவோம், மாநில உரிமைகளை பாதுகாப்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்து பொங்கல் விழா நடை பெற்றது.  கோவை  மாவட்டம், பெரியநாயக் கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அறிவொளிநகர் உள்ளிட்ட பகுதி களிலும், எஸ்.எஸ்.குளம் மேற்கில் சிவானந்தபுரம், கீரணத்தம், அம்பேத் கர்நகர், பன்னாரியம்மன் நகர், நஞ்சே கவுண்டன் புதூர் மற்றும் எஸ்.எஸ்.குளம் கிழக்கில் விளாங்குறிச்சியிலும் பொங்கல் விழா எழுச்சியோடு நடை பெற்றது. 

இதேபோன்று அன்னூரில் இந்தி ராநகர், அல்லிக்காரன்பாளையம்,  பட்டறை, உப்புத்தோட்டம், சானம் பாளையம் ஆகிய பகுதிகளிலும், பீளமேடு நகர குழுவில் தண்ணீர் பந்தல், ஆவரம்பாளையம், கோவை வடக்கு நகரக்குழுவில் கண்ணப்பநகர், அப்பாயி மன்றம், கணபதி புதூர், சிங்கையில் சௌரியபாளையம், தொண்டாமுத்தூரில் வடவள்ளி, சூலூர்  தாலுகாவில் இருகூர், நடுப்பாளையம், வஞ்சிபுரம், புளியமரத்துப்பாளையம், சின்னப்புதூர், கோவை மேற்கில் தில்லை நகர், செல்வபுரம் மற்றும் ஆனைமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட  ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வாலிபர் சங்கத்தின் சார்பில் பொங்கல்  விழா மற்றும் விளையாட்டு போட்டிகள்  உற்சாகமாக எழுச்சியோடு நடை பெற்றது.  இந்த பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளில், சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல் ஆகியவை களும், பெரியவர்களுக்கு சாக்கு  போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, இசை நாற்காலி, வேக நடை போட்டி, கோலப்போட்டி, உரி அடித்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன. இதே போன்று பல கிளைகளில் கடந்த ஒரு மாத காலமாக கிரிக்கெட், வாலிபால் போன்ற தொடர் போட்டிகள் நடை பெற்று பொங்கல் திருநாளில் பரிசளிப்பு  நிகழ்வுகள் நடைபெற்றது.  இதேபோன்று மாலையில் நடை பெற்ற பரிசளிப்பு மற்றும் தலைவர் களின் உரை உள்ளிட்டவைகளோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது. இதில், மாறு வேடப்  போட்டி,  நடனப்போட்டி, பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவை நடை பெற்றது. 

இவ்விழாக்களில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட  தலைவர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி, வாலிபர் சங்க மாநில  பொருளாளர் எஸ்.பாரதி, வாலிபர் சங்கத்தின் பாலக்காடு மாவட்ட செய லாளர் ஜெயதேவன், வாலிபர் சங்க  கோவை மாவட்ட தலைவர் விவே கானந்தன், செயலாளர் அர்ஜூன், பொருளாளர் தினேஷ்ராஜா மற்றும் நிர்வாகிகள் என்.ராஜா, நித்யா, மணி பாரதி மற்றும் தாலுகா, ஒன்றிய, நகர குழு நிர்வாகிகள், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அசார், மார்க்சிஸ்ட்  கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் வி. இராமமூர்த்தி, ஆர்.பூபதி, கண்ணகி ஜோதிபாசு, சுமதி உள்ளிட்டோரும், மார்க்சிஸ்ட் கட்சியின் நகர, ஒன்றிய, தாலுகா செயலாளர்கள் பங்கேற்று உரையாற்றினர்.  இதேபோன்று மாதர் சங்கத்தின் சார்பில் பல்வேறு பகுதிகளில் மக்கள்  ஒற்றுமை பொங்கல் விழா நடை பெற்றது. இதில், மாதர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிமணி, செயலாளர் சுதா,  பொருளாளர் உஷா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 

வாலிபர் சங்க, மாதர் சங்க மக்கள்  ஒற்றுமை எழுச்சி பொங்கல் விழாக் களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இதேபோன்று சிஐடியு ஈரோடு கட்டு மான தொழிலாளர் சங்கம் சார்பில் தை  பொங்கல் விளையாட்டு விழா நடை பெற்றது. திண்டல் காரப்பாறையில் எச்.ரவிச் சந்திரன் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில், மாவட்ட செய லாளர் எஸ்.மாதவன், உதவி தலைவர் சி.கே.முருகேசன் உள்ளிட்டோர் பங் கேற்று சிறப்பித்தனர்.  முன்னதாக இந் நிகழ்வில், சிறுவர், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  சார்பில் ஈரோடு, பெருந்துறை தாலுகா, வாவிக்கடை கிளையில் 13ஆம் ஆண்டு  மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா நடைபெற்றது. ஈரோடு பரணி பாவேந்தன் மருத்துவ மனை மருத்துவர் இன்னெசென்ட், ஊராட்சி மன்ற உதவி தலைவர் பூவேந்திரன், விவசாயிகள் சங்கம் சார்பில் பி.முத்துபழனிசாமி, சிஜடியு  சார்பில் பாலசுப்பிரமணி, வாலிபர் சங்க  மாவட்டசெயலாளர் வி.ஏ.விஸ்வ நாதன், மாவட்ட உதவி தலைவர் அன்பு  ஜனாதிபதி, மாதர் சங்க மாவட்டசெய லாளர் பா.லலிதா, ஆசிரியர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு வழங் கினர்.