சேலம், நவ.15- நங்கவள்ளி அருகே டாஸ்மாக் மதுபானக்கடையை இடமாற்றம் செய்து, திறக்க இருந்த பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம், ஜலகண்டபுரம் பேருந்து நிலையத்தில் செயல் பட்டு வந்த மதுபான கடையை இடமாற்றம் செய்து, தோர மங்கலம் ஊராட்சி, பொடையன் தெருவில் அமைக்க ஏற்பாடு களை டாஸ்மாக் நிர்வாகிம் மேற்கொண்டது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கடை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து கடையை திறக்க வந்த ஊழியர்கள் திரும்பி சென்றனர். முன்னதாக, இப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.ராஜாத்தி மற்றும் மாதர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் எஸ்.கார்த்திகாதேவி மற்றும் ஒன்றியக் குழு தலைவர் எஸ்.கனகராஜ், ஒன்றிய பெருந்தலைவர் பானுமதி பாலசுப்ரமணியம், தோரமங்கலம் ஊராட்சி தலைவர் சுந்தரம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.