districts

img

மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி மக்கள் போராட்டம்

ஈரோடு, டிச.19- பவானி அருகே மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், பவானி அருகே  உள்ள வைரமங்கலம் ஊராட்சி, சேவாக் கவுண்டனூர் செல்லும் சாலையில் மதுக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, மது அருந்த வருவோரால் விவ சாய நிலங்களில் உள்ள மின்மோட்டார் கள், கால்நடைகள் அடிக்கடி திருடு போவதாகவும், அடிக்கடி விபத்துகள் நேரிடுவதாகவும், இதனால் மதுக்க டையை அகற்ற வேண்டும் என பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கடந்த இரண்டு மாதங்க ளுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது, கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தி ருந்தனர். ஆனால், இதுவரை மதுக் கடை இடமாற்றம் செய்யப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக் கள், மதுக்கடைக்குச் செல்லும் வழித் தடத்தில் தடைகளை ஏற்படுத்தியதோடு, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி வட் டாட்சியர் தியாகராஜ் மற்றும் கவுந்தப் பாடி காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். அப்போது, உடனடியாக மதுக் கடையை இடமாற்றம் செய்ய நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.