கோவை, ஜூலை 30- இடிகரை பேரூராட்சியில் நடை பெற்ற மக்கள் குறைகேட்பு முகா மில் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். கோவை மாவட்டம், இடிகரை பேரூராட்சியில் ஞாயிறன்று மக்கள் குறைகேட்பு முகாம் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார் தலைமை யில் நடைபெற்றது. இம்முகாமில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண் டார். அப்போது, குடிநீர் விநியோகத் தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சீர் படுத்த வேண்டும். இடிகரை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சாலை அமைக்க வேண்டும். பேரூராட்சி பகுதி குடியி ருப்புகளின் காலி மனை மற்றும் சாலையோரங்களில் மண்டிக்கிடக் கும் புதர்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர் பாக பொதுமக்கள் பி.ஆர்.நடராஜன் எம்.பி.,யிடம் அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட பி.ஆர்.நடராஜன் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இம்முகாமில், பேரூராட்சி தலை வர் என்.ஜனார்த்தனன், துணைத் தலைவர் எஸ்.சேகர், 13 ஆவது வார்டு உறுப்பினர் கே.கற்பகம் குப்புராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஆர்.கோபால், கே.எஸ்.கனக ராஜ், மாநகராட்சி மாமன்ற உறுப்பி னர் வி.ராமமூர்த்தி உட்பட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண் டனர்.