திருப்பூர், ஜன. 8 – வருங்கால வைப்பு நிதியைப் பாதுகாக்க வும், இபிஎஸ் ஓய்வூதியத்தை குறைந்தபட் சம் ரூ.9 ஆயிரமாக உயர்த்தவும் வலியுறுத்து திருப்பூரில் இபிஎஸ் 95 ஓய்வூதியர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட வருங்கால வைப்பு நிதி அலு வலகம் முன்பாக திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசு இபிஎஸ் ஓய்வூ தியத்தை மாதம் ரூ.9 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும், வருங்கால வைப்பு நிதித் திட்டத் தைப் பாதுகாக்க வேண்டும் இபிஎஸ் ஓய்வூ தியர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், பங்கு மார்க்கெட் சூதாட் டத்தில் வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்யக் கூடாது, மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய குழு உறுப்பினர் ஏ.ஆர்.துரைசாமி, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.செல்வராஜ், கோவை மாவட்டத் தலைவர் ஆர்.நாகராஜ், கோவை மாவட்டச் செயலாளர் கே.குமாரசாமி, திருப் பூர் மாவட்டத் தலைவர் சி.ஈஸ்வரமூர்த்தி, மாவட்டச் செயலாளர் வி.கோபால், மாவட் டப் பொருளாளர் எம்.தேவராஜ் மற்றும் மு.சம் பத் உள்ளிட்டோர் உரையாற்றினர்.இபிஎஸ் 95 ஓய்வூதியர்கள் சுமார் நூறு பேர் இதில் கலந்து கொண்டனர்.