தாராபுரம், நவ 3 - தாராபுரத்தில் ஓய்வூதியர்களின் பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்துதுறை ஓய்வூ தியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தாராபுரம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் வட்டக்கிளை தலைவர் பீர்ஜாபர் தலைமை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு வழங் கும் அதே நாளில் அகவிலைப்படியை அனைத்து மாநில அரசு ஓய்வூதியர்க ளுக்கும் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். மருத்துவ சிகிச்சை செலவுகள் அனைத்தையும் முழுமையாக வழங்க வேண்டும். 20 சதவீதம் உயர்த்தப்பட்ட ஓய்வூதி யத்தை 65 வயது முதல் 70 வயதுக்குள் வழங்க வேண்டும். கொரோனா காலத் தில் முடக்கப்பட்ட முதியோர் ரயில் பய ணக் கட்டணச் சலுகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. வட்டக்கிளை செயலா ளர் ராஜேந்திரன், பொருளாளர் நசுரு தீன், வட்டக்கிளை இணை செயலா ளர் ரீட்டா, மாவட்ட பொருளாளர் மேக வர்ணன், ஊரக வளர்ச்சித்துறை ஓய்வு பெற்றோர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மணியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.