districts

img

கிடப்பில் போடப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு கருப்புப்பட்டை அணிந்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ.3- உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல், ஓராண் டாக காலதாமதப்படுத்து வதைக் கண்டித்து இபிஎப் பென்சனர்கள் நலச்சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயி ரம் வழங்க வேண்டும். பறிக் கப்பட்ட ரயில் கட்டண சலு கையை வழங்க வேண்டும். கேரளாவைப் போல தமிழக அரசு குறைந்தபட்ச ஓய்வூதி யம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். உச்சநீதிமன்றத் தின் தலைமை நீதிபதி அமர்வு அளித்த  தீர்ப்பினை அமல்படுத்தாமல், ஓராண்டாக கிடப்பில் போட்ட இபிஎப் அலுவலக நிர்வா கத்தைக் கண்டித்து இபிஎப் பென்சனர்கள் நலச்சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு பிஎப் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு அமைப்பின் மண்டல துணைத் தலைவர் கே.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மண்டல தலைவர் ஏ.மாணிக்கம், செயலாளர் பி.சண்முகம், ஓய்வூதியர்களின்  ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் சி.பரம சிவம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  கோவை இதேபோன்று கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வெள்ளியன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இபிஎப் பென்சனர் கள் நலச்சங்க மாவட்டத் தலைவர் ஆர்.நாக ராஜன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் புஷ்பராஜ் செல்வராஜ் துவக்க உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் குமா ரசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். முடி வில், எஸ்.ஆர்.மணி நன்றி கூறினார்.