உதகை, பிப்.18- குன்னூரில் இபிஎஸ் 95 பென்சனர்கள் நலச்சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது. இபிஎஸ் 95 பென்சனர்கள் நலச்சங்கத் தின் சிறப்பு பேரவை கூட்டம் குன்னூர் ராயல் ரிட்ரீட் அரங்கத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பிரித்தி விராஜ் துவக்க உரையாற்றினார். பொருளா ளர் ராஜரத்தினம் நிதி நிலை அறிக்கையை முன்வைத்தார். அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் ஏ.ஆர்.துரைசாமி மற்றும் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஆர்.செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி ராமன் குட்டி, சிஐடியு மாவட்டத் தலைவர் எல்.சங்கரலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில், ராஜப்பன் நன்றி கூறினார்.