districts

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தினர் ஆவேசம்

தருமபுரி, மே 9- சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தினர், குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும். அக விலைப்படி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இ.கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எம்.கணேசன், மாவட்ட செயலாளர் பி.சுப்பிரமணியன், மாவட்ட  பொருளாளர் சி.ஜானகிராமன், அனைத்து துறை ஓய்வூதி யர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் பி.பெருமாள், சத் துணவு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர்  கே.துரை, அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க  மாநிலச் செயலாளர் கே.குப்புசாமி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.காவேரி உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர்.