தருமபுரி, மார்ச் 15- மின்வாரியத்தை பொதுத்துறை யாக நீடிக்க வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரியம் பொதுத்துறையா கவே நீடிக்க வேண்டும். தேர்தல் வாக் குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும். மருத் துவக்காப்பீடு திட்டத்தில் உள்ள குறை பாடுகளை களைய வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி 70 வயதுடைய ஓய்வூதி யர்களுக்கு 10 சதவிகிதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். விதவை, விவாகரத்து, உடல் ஊனமுற்றவர்க ளுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் உள்ள நிபந்தனைகளை அகற்ற வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்பாட்டத்திற்கு ஓய்வுபெற் றோர் நல அமைப்பின் மாவட்டத் தலை வர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித் தார். இதில், மாவட்ட செயலாளர் ஜி.பி. விஜயன், மாவட்ட பொருளாளர் எம்.சின் னசாமி, மாவட்ட உதவித் தலைவர்கள் டி.சிவம், எம்.துரைசாமி, மின்வாரிய பொறியாளர் அமைப்பின் மாவட்ட செயலாளர் எம்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி ஆவேச முழக்கங் களை எழுப்பினர்.