ஓய்வூதியர் கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, நவ.3- மூத்த குடிமக்களின் உரிமை களை பறிக்காதே என அகில இந்திய ஓய்வூதியர் சங்கத்தின் கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டத்தின் அறைகூவலை ஏற்று தமிழகம் முழுவதும் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைவருக்கும் குடும்ப ஓய்வூ தியம் வழங்கவேண்டும். ஒன்றிய அரசு வழங்கும் நாளிலே அனைத்து ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதி யர்களுக்கு அகவிலைப்படியை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். 20 சதம் உயர்த்தப் பட்ட ஓய்வூதியத்தை 65 வயது முதல் 70 வயதுக்குள் பழைய ஓய்வூ தியதாரர்களுக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூ தியம் 12 ஆயிரமாகவும், கடைசி ஊதியத்தில் 50 விழுக்காடாகவும் வழங்க வேண்டும்.
அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் குறைபாடு இல் லாமல், எல்லா நோய்களுக்குமான முழுமையான செலவுத் தொகை யை வழங்கவேண்டும். நிறுத்தப் பட்ட ரயில் பயண கட்டண சலுகை யை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன் வைத்து தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் எம்.பெருமாள், மாநில இணைச்செயலாளர் கே.குப்பு சாமி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநில உதவித் தலைவர் கோபாலன், மாவட்ட துணைத் தலைவர் எம்.கார்த்திகேயன், ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூ தியர் சங்க மாவட்ட தலைவர் கேசவன், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி வாழ்த்தி பேசினார்.
கோவை
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் எஸ்.மதன் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.பால கிருஷ்ணன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கே. அருண கிரி கோரிக்கையை விளக்கி உரை யாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் என். அரங்கநாதன், திருச்சி மாவட்ட தலைவர் சின்ன சாமி மற்றும் வட்டக்கிளை செய லாளர்கள் உரையாற்றினர். முடிவில், பொருளாளர் பி. சாமி நடராஜன் நன்றி கூறினார். ஓய்வூ தியர் கோரிக்கை நாள் ஆர்ப்பாட் டத்தில் ஏராளமானோர் பங்கேற் றனர்.
சேலம்
சேலத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சேலம் நாட் டாமை கழக கட்டிடம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், கோரிக்கைகளை வலியு றுத்தி மாவட்ட செயலாளர் ராஜ் குமார், மத்திய மாநில பொதுத் துறை கூட்டமைப்பு மாவட்ட செய லாளர் டி.நேதாஜி சுபாஷ், பள்ளி கல்லூரி ஆசிரியர் ஓய்வூதியர் நல சங்க மாவட்ட தலைவர் சேவை. அங்கப்பன் ஆகியோர் பேசினர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ரா. சுப்பிரமணியம் நிறை வுரையாற்றினார். இதில் ஏராள மானோர் பங்கேற்றனர்.
ஈரோடு
இதேபோல், அரசாணை 152ஐ ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பவானி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணை செய லாளர் தா. திருமுருகன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சாலை ஆய்வாளர் சங்க பவானி உட் கோட்ட செயலாளர் என்.ஜோதி பாசு, நகராட்சி அலுவலர் சங்க தலைவர் ஈ.வேலு ஆகியோர் பேசினர். போராட்டத்தை வாழ்த்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் பொருளாளர் ஏ.ஜெகநாதன் பேசினார்.