districts

img

பென்னாகரம்: சூறைக்காற்றால் வாழைத்தோட்டம் சேதம்

பென்னாகரம், மே 3- பென்னாகரம் அருகே வீசிய பலத்த சூறைக்காற்றால் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள், குழையு டன் சாய்ந்தன. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பொன்னேரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சேவியப்பன். இவர் தனது விவசாய நிலத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் வாழைத்தோட்டம் வைத்து ஒரு ஆண்டாக பராமரித்து வந்தார். தற்பொழுது அனைத்து வாழை மரங் களிலும் குழை வைத்துள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் வாழை தார்கள் அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. இந்நிலையில், திங்களன்று இப்பகுதியில் பலத்த சூறாவளி  காற்றுடன் மழை பெய்தது. இதனால், சேவியப்பனின் வாழைத்தோட்டத்தில் இருந்த வாழை மரங்கள் அனைத்தும் சாய்ந்தன. இதுகுறித்து விவசாயி சேவியப்பன் கூறுகை யில், ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயார் நிலையி லிருந்த அனைத்து வாழைமரங்களும் சூறைக்காற்றால் சேத மடைந்தன. இதனால், சுமார் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு சார்பில் உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.