கோவை, டிச.21- கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 31 ஆவது வார்டு பதிகவுண்டர் தோட்டம் மற்றும் காமராஜ புரம் சாலை,சி.எம்.சி.காலனி ஆகிய பகுதிகளை வியாழ னன்று கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பதிகவுண்டர் தோட் டம் பகுதியில், குழாய் பதிக்க புதிதாக போடப்பட்ட தார் சாலையை சேதப்படுத்திய வீட்டின் உரிமையாளரை கண் டித்த, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், சாலையை சேதப்படுத்தியவருக்கு ரூ.1000 அபராதம் விதித்தார். இதே போன்று, புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் வாகனத்தை நிறுத்தி, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து சாலையை சேதப் படுத்திய வாகன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மாநகராட்சி ஆணையரின் இந்த அதி ரடி நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, ஆணையரின் ஆய்வு நடவடிக்கையில், மாந கராட்சி துணை ஆணையர் சிவகுமார், மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகு, மாமன்ற உறுப்பினர் வைர முரு கன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.