சேலம், செப்.2- சேலம் கோட்டத் திற்குட்பட்ட ரயில் களில் மேற்கொள்ளப் பட்ட திடீர் சோதனையில் பயணச் சீட்டு இல்லாமல் பயணித்த 637 பேரிட மிருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 820 அபராதமாக வசூலிக்கப்பட்டது. சேலம் ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் 9 ரயில் களில் பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பது உள்ளிட்ட ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைக் கண்டறிய ரயில்வேத்துறை கடந்த மாதம் 29 ஆம் தேதி திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்:13352), சென்னை சென்ட்ரல்-மேட்டுபாளையம் இடையே இயக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் (எண்:12671), மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயில் (எண்:06009), ஈரோடு– பாலக்காடு டவுன் மெமு ரயில் (எண்:06819), ஆலப்புழா –தன்பாத் விரைவு ரயில் (எண்:13352), கோர்பா-கொச்சுவேலி விரைவு ரயில் (எண்:22647), மங்களூரு சென்ட்ரல் – சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்:22638), சென்னை சென்ட்ரல்- கோவை விரைவு ரயில் (எண்:12675), ஈரோடு-திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் (எண்:06612)ஆகிய 9 ரயில்களில் நடைபெற்றது. இந்த சோதனையில் 21 பயணச் சீட்டு பரிசோதகர்கள் ஈடு பட்டனர். இந்த சோதனையின்போது பயணச் சீட்டு இல்லாமல் பயணித்த 637 பேரிடமிருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 820 அபராதமாக வசூலிக்கப்பட்டது.