தாராபுரம், ஜன.16- கவுண்டச்சிபுதூர் ஊராட்சிகுட்பட்ட பகுதியில் குப்பை கழிவுகளை கொட்ட முயன்ற வாகன உரிமை யாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தாராபுரம் ஒன்றியம், கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக் குட்பட்ட பகுதியில், சாலையோரங்களில் அடிக்கடி உணவு கழிவுகள், இறைச்சி கழிவுகள், குப்பை கழிவு களை இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர் கள் கொட்டி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வந்தனர். இந் நிலையில், கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட தாரா புரம் – பொள்ளாச்சி சாலை, சமத்தூர் பிரிவில் சரக்கு வாகனம் ஒன்றில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டப்படுவது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ், துணைத் தலைவர் நாச்சிமுத்து, 3 வது வார்டு உறுப்பினர் நர்மதா ஈஸ்வரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதன்பின், குப்பை கழிவுகளை கொண்டு வந்த சரக்கு வாகன உரிமையாள ருக்கு ரூ..500 அபராதம் விதித்து, இனிமேல் கொட்டக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.