மழைநீர் வடிகால் சேதம் வணிக வளாகத்திற்கு அபராதம்
கோவை, அக்.10- மழைநீர் வடிகாலை சேதப்படுத்தியதாக கோவை புரோசன் வணிக வளாகத்திற்கு கோவை மாநகராட்சி ரூ. 1லட்சம் அபராதம் விதித்துள்ளது. கோவை- சத்தியமங்கலம் சாலை சிவானந்தபுரத்தில், புரோசன் வணிக வளாகம் உள்ளது. இப்பகுதியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மழைநீர் வடிகாலை இந்த வணிக வளாகத்தினர் சேதப்படுத்தியுள்ளது தெரிய வந் துள்ளது. இதனையடுத்து, கோவை மாநகராட்சி வடக்கு மண்ட லத்தின் சார்பில் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பி யுள்ளனர். வடக்கு மண்டல உதவி பொறியாளர், புரோசன் வணிக வளாகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கோவை மாநக ராட்சி வடக்கு மண்டலம் வார்டு 21ஆவது வார்டு சத்திய மங்கலம் பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மழைநீர் வடிகாலை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுவனம் சேதப்படுத்தியது. இச்செயலுக்கு மாநக ராட்சி மூலம் அபராதம் விதித்த வழங்கப்பட்ட நோட்டீஸை வாங்க மறுத்துள்ளது. எனவே, சேதப்படுத்தப்பட்ட மழைநீர் வடிகாலை சீரமைக்க, மாநகராட்சி மூலம் விதிக்கப்பட்ட அபராதத் தினை உடனடியாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத் தில் வணிக வளாகத்திற்கு குடிநீர் இணைப்பு துண்டிக் கப்படுவதுடன், வணிக வளாகத்தில் உள்ள கடைகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் மார்க்சிஸ்ட் கட்சியினர் வழக்கிலிருந்து விடுதலை
உதகை, அக்.10- உதகையில், விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் 35 ஆண்டுகளாக 11 ஏக்கர் நிலத்தில் 24 ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் விவசாயம் செய்து வந்தனர். அந்த விவசாயிகளை, குந்தா பேரூராட்சி நிர்வாகம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரி வித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் அலியார் தலைமையில் போராட்டம் நடை பெற்றது. இதையடுத்து, அலியார் மற்றும் ராமையா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்ட போராட்டத்தை மேற்கொண்டனர். செவ்வா யன்று நீலகிரி மாவட்ட நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்தது. மேலும், போராட்டம் நடத்தியது தவறில்லை என கூறியது. இந்த சட்டப் போராட்டம் 2016 ஆம் ஆண்டு முதல் ஏழு ஆண்டுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் திறம்பட வாதிட்ட வழக்கறிஞர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி யினர் நன்றி தெரிவித்தனர்.
தமிழறிஞர் குருசாமி நூற்றாண்டு விழா
கோவை, அக். 10- கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் தமிழ் அறிஞரும், பேராசிரியருமான ம.ரா.போ குரு சாமி நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை வகித் தார். கல்லூரி செயலாளர் கண்ணையன் முன்னிலை வகித் தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
குமரகுரு தொழில் நுட்ப கல்லூரியில் 12 ஆயிரம் சதுரடியில் பிரம்மாண்ட அரங்கம்
கோவை, அக். 10- சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் “சாராபாய் கலாம்” என்ற பிரம்மாண்ட அரங்கின் திறப்பு விழா மற்றும் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை சரவணம்பட்டி பகுதியில் குமரகுரு கல்லூரி இயங்கி வருகின்றது. இங்கு சுமார் 450 பேர் அமரும் வகை யில் “சாராபாய் கலாம்” என்ற அரங்கத்தின் துவக்கவிழா நடை பெற்றது. இதனை இஸ்ரோ-வின் முன்னாள் அறிவியல் செய லாளர் ஒய்.எஸ் ராஜன் மற்றும் ஆலோசனை குழுவின் மூத்த உறுப்பினர் ராகேஷ் சர்மா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். 12 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அரங்கில், மேம்படுத்தப்பட்ட ஆடியோ, காட்சி தொழில்நுட்பம், உன்னிப்பாக வடிவமைக் கப்பட்ட ஒலியியல் விளக்கு அம்சங்கள், எல்இடி சுவர் ஆகி யவை இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த அரங்கில் சிம் போசியம் மூலமாக, அதிநவீன உச்சி மாநாடு மற்றும் நாடக நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது சாராபாய் கலாம் அரங்கத்தின் திறப்பு விழாவில் குமரகுரு கல்லூரியின் தாளாளர் கிருஷ்ணராஜ் வானவராயர், துணை தலைவர் மாணிக்கம், தாளாளர் பாலசுப்பிரமணியம் துணை தாளாளர் சங்கர் வானவராயர், ஆசிரியர்கள் மற்றும் மாண வர்கள் கலந்து கொண்டனர்.
மின்னல் தாக்கி எரிந்த பனைமரம்
திருப்பூர், அக்.10- திருப்பூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்த நிலையில் ஊத்துக்குளி சாலை பெட்டிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே பனை மரத்தில் இடி விழுந்து தீப்பற்றி எரிந்து முற்றாக கருகியது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், காங்கேயம், பல்லடம், அவிநாசி, மங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் திங்களன்று மாலை தொடர்ந்து நீண்ட நேரம் கன மழை கொட்டித் தீர்த்தது. திங்களன்று பெய்த மழையின் காரணமாக திருப்பூர் மாந கரின் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வீடு களின் உள்ளே புகுந்தது. குறிப்பாக சத்யா நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தகவல் அறிந்து மாநக ராட்சி மேயர் ந.தினேஷ்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு, வீடுகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வும், பொது மக்கள் இரவு நேரம் பாதுகாப்பான இடத்தில் தங்க வும் ஏற்பாடு செய்தார். அதேபோல் ஊத்துக்குளி சாலை பெட்டிக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் பனை மரம் ஒன்றில் திடீரென மின்னல் தாக்கி இடி விழுந்தது. இதில் பனைமரம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அந்த மரம் இருந்த இடத்தில் சுற்றிலும் குடியி ருப்பு, வீடுகள் இல்லாத நிலையில் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இடி விழுந்து பனை மரம் தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரு கிறது.
வள்ளலார் 200 நிறைவு விழா
திருப்பூர், அக்.10 - திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் ஞாயி றன்று வள்ளலார் 200 நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ் விற்கு சன்மார்க்க சத்திய சங்கப் பொருளாளர் பா.ஜீவானந் தம் தலைமை வகித்து வரவேற்றார். முன்னாள் ஆசிரியர் தன்னாசி பாண்டியன், வள்ளலாரின் ஜீவ காருண்யம், பசிப் பிணி போக்குதல், ஆன்மநேய ஒருமைப்பாடு குறித்து உரை யாற்றினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒளி வழிபாட்டுக் குப் பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை மாநக ராட்சி மேல்நிலைப் பள்ளி 7ஆம் வகுப்பு மாணவர் ராமானு ஜம் திருவருட்பா பாடல்களைப் பாடினார். சன்மார்க்க சங் கத்தைச் சேர்ந்த சரசுவதி, வள்ளலாரின் யாப்பு இலக்கணம் சொல்லும் விருத்தக் கட்டமைப்பில் அதீத திறமை குறித்தும், சுவடிகளைப் பிரதி எடுத்தல், மனனம் செய்தல் பொருள் விளக் கம் பெறுதல், படித்ததைக் கதையாகவும், பாடலாகவும் பிர சங்கம் செய்தல், குறித்து உரையாற்றினார். வள்ளலார் ஆர்வ லர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். யுவராஜ் நன்றி கூறினார்.
போதை மாத்திரை: மருந்துக் கடைக்கு சீல்
திருப்பூர், அக்.10 – திருப்பூர், பூலுவபட்டி சுற்றுச்சாலை பகு தியில் அனுப்பர்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் சோதனை செய்ததில் ஏராளமான போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 110 மாத்திரை அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், போதை மாத்திரைகளை விற்ப னைக்கு வைத்திருந்த சூசையாபுரத்தைச் சேர்ந்த தீபக்குமார் (25), ஹரிஹரசுதன் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அனுப்பர்பாளையம் போலீசார் கொடுத்த தகவலைத் தொடர்ந்து, மாவட்ட மருந்து கட் டுப்பாடு ஆய்வாளர் தலைமையில் அதிகாரி கள் அவிநாசி அருகேயுள்ள மருந்து கடை யில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ஏராள மான வலி நிவாரண மாத்திரைகளை அதிகாரி கள் பறிமுதல் செய்து அந்த மருந்து கடைக்கு சீல் வைத்தனர்.
தனியார் பள்ளிக்கு முறைகேடாக வழங்கிய அரசு நிலம்
சென்னையில் போராட்டம்
சென்னையில் போராட்டம் திருப்பூர், அக்.10- கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தனியார் பள்ளிக்கு முறைகேடாக வழங்கிய 8.90 ஏக் கர் நீர்நிலை தன்மை கொண்ட நிலங்களை மீட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணா நிதி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வலியு றுத்தி சென்னையில் காத்திருப்புப் போராட் டம் நடத்தப் போவதாக நஞ்சராயன் குளம் பாதுகாப்புச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து நஞ்சராயன் குளம் பாது காப்பு சங்கத்தின் தலைவர் கிருஷ்ணசாமி திங்களன்று செய்தியாளர்களிடம் கூறியதா வது, திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட் டம், சர்க்கார் பெரியபாளையம் கிராமத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நஞ்சரா யன் குளம் 440 ஏக்கரில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றின் துணை ஆறான நல்லாற் றின் குறுக்கே அமைக்கப்பட்டு 800 ஆண்டு களுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த குளத்தில் 157 வகை பறவை இனங்களும், 40 வகை பட்டாம்பூச்சிகளும், 76 வகை தாவரங்க ளும், 11 வகை நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் 16 வகை பூச்சி இனங்களும் வந்து செல்லும் வாழ்விடமாகவும், வெளிநாட்டு பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்து செல்லும் இட மாகவும் விளங்கி வருகிறது. இதனிடையே நஞ்சராயன் குளத்தை 17 ஆவது பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் இந்த குளத்தை ஒட்டி உள்ள தனியார் பள்ளிக்கு முறைகேடாக வழங்கிய 8.90 ஏக்கர் நீர்நிலைத் தன்மை கொண்ட நிலங்களை மீட்க வேண்டும். அதில் முன் னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணா நிதி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நஞ்சரா யன் குளம் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சென்னையில் தலைமை செயலகம் முன்பு வரும் 12ஆம் தேதி முதல் தொடர் காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி
திருப்பூர், அக். 10- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், திருப்பூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பில், பேரறி ஞர் அண்ணா பிறந்த தினத்தையொட்டி மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி சனியன்று நடைபெற உள்ள தாக மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதா னத்தில் சனியன்று காலை 7 மணிக்கு இப்போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவி யர்கள் இந்தியாவில் தயாரான சாதாரண மிதி வண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கீர் பொருத்தப்பட்ட மிதிவண் டிகளை பயன்படுத்தக் கூடாது. ஆதார் அட்டை நகல் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும் எனவும், போட்டியில் பங்கேற்பவர்கள். அரை மணி நேரத்திற்கு முன்பாகவே போட்டி துவங்கும் இடத்திற்கு மிதி வண்டியுடன் வர வேண்டும். 13 ஆம்தேதி மாலை 6 மணிக்குள் பெயர்களை சிக்கண்ணா அரசு கலைக்கல் லூரி வளாகத்திற்குள் உள் பல்நோக்கு உள்விளையாட்டு அரங் கம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.
மின்கசிவால் திடீர் தீ விபத்து
சேலம், அக்.10- ஆத்தூர் அருகே டிவி மெக்கானிக் கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பாரதி நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் ஆத்தூர் புறவழிச்சாலை அருகே உள்ள பெரியாண்டிச்சி கோவில் பகுதியில் டிவி பழுது பார்க் கும் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவர் திங்களன்று இரவு வழக்கம் போல் கடை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ள நிலையில், இரவு 11 மணியளவில் பூட்டிய கடையிலிருந்து புகை எழுந்துள்ளது. இதன்பின் கடை திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து அருகிலிருந்த பொதுமக் கள் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்த னர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, தீய ணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி, தீயை கட் டுக்குள் கொண்டு வந்தனர். இதன்பின் நடைபெற்ற ஆய்வில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இவ்விபத்தில் கடையிலிருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள் கடும் அவதி
சேலம், அக்.10- சேலத்தில் திங்களன்று இரவு விடிய விடிய பெய்த பலத்த மழையால் வீடு களுக்குள் மழைநீர் புகுந்ததால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டம் முழுவதும் திங்க ளன்று மாலை மனழ பெய்ய தொடங்கி பலத்த மழையாக விடிய விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதி களில் மழைநீர் தேங்கியது. சூரமங்க லம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, புதிய பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவல கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத் திற்குள்ளாகினர். சேலம் மாநகராட்சி, 37, 40, 43 ஆவது வார்டுகளுக்குட்பட்ட பகுதியில் பெய்த பலத்த மழை கார ணமாக, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த தால், பொதுமக்கள் விடிய விடிய தூங் காமல் பெரிதும் அவதிக்குள்ளாகினர். பலத்த மழை பெய்யும் போது இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக இருக்கிறது. மழையால் ஊருக்குள் தண் ணீர் போவது வாடிக்கையாகி வரு கிறது. இதனை தடுக்க மாநகராட்சி நிர் வாகமும் பல்வேறு நடவடிக்கை எடுக் காததால் பொதுமக்கள் பல்வேறு இன் னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதேபோல மகாத்மா காந்தி விளை யாட்டு மைதானத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. சிறு மழை பெய் தால் கூட இந்த விளையாட்டு மைதானம் மழைநீரால் சூழும் அபாயம் ஏற்பட்டுள் ளது. இதனால் விளையாட்டு வீரர்கள், காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். அதே சமயம் தண்ணீர் வெளியேற்றாமல் அதி காரிகள் மெத்தனமான செயல்படுவ தால், விளையாட்டு மைதானம் சிறு மழை குளமாகவே உள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற முடி யாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பணம் கொள்ளை
நாமக்கல், அக்.10- நாமக்கல் மாவட்டம், பர மத்திவேலூர் பேருந்து நிலை யம் அருகே பேக்கரி வைத்து நடத்தி வருபவர் ஜெயன் (45). இவர் செவ்வாயன்று காலை பேக்கரியை திறந்து உள்ளே சென்றபோது, கடையிலிருந்த ரூ.1.15 லட்சம் திருடு போயி ருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கடையின் கண்காணிப்பு கேமரா பதிவு களை ஆய்வு செய்தபோது, ஒருவர் கடையின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடி செல் வது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்ற னர்.