நாமக்கல், ஏப்.30- காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரிய வழக்கில், நாமக்கல் நுகர் வோர் நீதிமன்றம் ஒரேநாளில் அதற் குண்டான தொகையை பெற்றுக் கொடுத்துள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அருகே உள்ள வெண் ணங்கல் காடு கிராமத்தைச் சேர்ந்த வர் சுப்ரமணியம். அவரது மகன் தமிழ்ச்செல்வன் இருசக்கர வாகன விபத்தில் இறந்ததால் வழங்க வேண்டிய தனிநபர் காப்பீட்டுத் தொகையை வழங்குமாறு நாமக் கல்லில் உள்ள ஸ்ரீராம் ஜென ரல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு கடந்த பிப்ரவரி மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதி பதி வீ.ராமராஜ், உறுப்பினர் ஆர். ரமோலா ஆகியோர் செவ்வாயன்று உத்தரவு பிறப்பித்தனர். இதைய டுத்து தீர்ப்பின்படி இன்சூரன்ஸ் நிறு வனம் செலுத்திய ரூ.22 லட்சத்து 22 ஆயிரத்து 392க்கான டிமாண்ட் டிராப்ட்டை, நீதிபதி டாக்டர் ராம ராஜ் சுப்பிரமணியத்துக்கு வழங்கி னார். இதேபோன்று நாமக்கல்லில் உள்ள அழகு நகரைச் சேர்ந்த ராம சாமி என்பவரின் மனைவி கலை வாணி (50). இவருக்கு சொந்த மான இடத்தில் வீடு கட்டுவதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருச்சி கண்டோன்மென்ட், பாரதி சாலை யில் உள்ள ரோஷன் குரூப் ஆப் கம் பெனிஸ் நிர்வாக இயக்குனர் சுப்பிர மணியன் மகன் சதீஷ் பாபு என்பவ ரிடம் கலைவாணி ஒப்பந்தம் செய் துள்ளார். இதற்காக ரூ.48 லட் சத்தை கலைவாணியிடம் பெற்றுக் கொண்ட சதீஷ்குமார், ஒப்பந்தப் படி வீட்டை முழுமையாக கட்டித்தர வில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கலைவாணி நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வீ.ராம ராஜ் தலைமையிலான அமர்வு, வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ. 30 லட்சத்தை நான்கு வாரத்தில் கட் டிட ஒப்பந்ததாரர் வழங்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கியது. இதனிடையே, நான்கு வார காலத்திற்குள் பணத்தை செலுத்தாததால் சதீஷ்குமாரை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று கலைவாணி கடந்த பிப்ரவரி மாதம் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் தார். இதையடுத்து சதீஷ்குமாரை கைது செய்ய நல்லிபாளையம் காவல் நிலைய ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலை யில், செவ்வாயன்று கட்டிட ஒப்பந் ததாரர் சதீஷ்குமார் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நான்கு வார காலத்துக்குள் ரூ.30 லட்சத்தை வட் டியுடன் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மற்றொரு வழக்கு நாமக்கல் மாவட்டம், தும்மங்கு றிச்சியைச் சேர்ந்த பெரியசாமியின் மனைவி சிவகாமி (40). அவரது கணவர் இறந்ததற்காக காப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சமும், இழப்பீட் டுத் தொகை ஒரு லட்சமும் வழங்க வேண்டும் என்று எச்டிஎப்சி இன்சூ ரன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த ஜூன் மாதம் நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப் பித்திருந்தது. இந்த தொகையை வழங்காததால் சிவகாமி சமர்ப் பித்த முறையீட்டை ஏற்று நாமக் கல் எச்டிஎப்சி இன்சூரன்ஸ் நிறுவன கிளை மேலாளரை கைது செய்யு மாறு காவல்துறைக்கு நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ், உறுப் பினர் ஆர்.ரமோலா ஆகியோர் செவ்வாயன்று உத்தரவு பிறப்பித்த னர்.