districts

img

நீதிமன்ற உத்தரவுபடி ஊதியம் வழங்கிடுக: சிஐடியு போராட்டம்

கோவை, நவ.21- இந்தியாவில் முதன் முறையாக நீரிலும்,  நிலத்திலும் செல்லும் வகையில்  வடிவமைக்கப்பட்ட ரோவர் கிராஃப்ட் பட கின் சோதனை ஓட்டம், கோவை சூலூர்  குளத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த  ராவத்தூர் பகுதியைச் சேர்ந்த யூரோடெக்  சொல்யூஷன் லிமிடெட் என்ற தனியார்  நிறுவனம் ட்ரில்லிங் மெஷின், கிரைண்டிங்  மெஷின் உள்ளிட்ட பல்வேறு உபகரணங் களை தயாரித்து வருகிறது. இந்நிறுவ னம் நாட்டிலேயே முதல் முறையாக நீரி லும் நிலத்திலும் இயங்கும் வகையில்  சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரோவர் கிராஃப்ட் படகை தயாரித்துள்ளது.  இதன் சோதனையோட்டம்  சூலூரில் உள்ள சின்ன குளத்தில் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படையினரின் பாதுகாப்புடன் செவ்வாயன்று நடைபெற்றது. ரோவர் கிராப்ட் படகு நீரில் சீறிப்பாய்ந்தது. இதனை  அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் ஆர் வத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.