districts

ஊதிய உயர்வு, பணி நிரந்தம், காலமுறை ஊதியம் கேட்டு தோட்டக்கலைத்துறை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

உதகை, மார்ச் 23- நீலகிரி மாவட்டத்தில் உள்ள  தோட்டக்கலை துறைக்கு சொந்த மான பூங்கா மற்றும் அரசு பண்ணை களில் பணியாற்றும் 500க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் ஊதி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி உதகை அரசு தாவரவியல் பூங் காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா நகரமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் 30 முதல் 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணி கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட் டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங் களை அதிகளவு கண்டு ரசித்து செல் கின்றனர். சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லும் வகையில் பூங்காக் களை தயார் படுத்தும் பணியில் நிரந் தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அது மட்டு மல்லாமல் தோட்டக்கலைதுறைக்கு சொந்தமான பண்ணைகளிலும் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தினக்கூலியாக ரூ.400 மட்டுமே பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், 480 நாட்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்று பவரை பணி நிரந்தரம் செய்ய வேண் டும். சிறப்பு காலமுறை தொகுப்பு  ஊதியத்தை வழங்க வேண்டும். அர சாணைபடி நாள் ஒன்றுக்கு ரூ.700 அடிப்படையில் ஊதியம் வழங்க வேண் டும். தற்காலிக ஊழியர்களை காலி யாக உள்ள பண்ணை மற்றும் தோட் டக்கலைத்துறைக்கு சொந்தமான பூங் காக்களில் நிரந்தர பணியாளர்களாக பணிமாற்றம் செய்ய வேண்டும் உள் ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி 500க்கும் மேற்பட்ட தோட்டக் கலைத்துறை பூங்கா, பண்ணை ஊழி யர்கள் தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பூங்கா ஊழியர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் நடை பெறும் மலர் கண்காட்சி மற்றும் இரண் டாவது சீசனுக்காக மழையையும் காற்றையும், கடும் குளிரைப் பொருட் படுத்தாமல் பூங்காவை பாதுகாத்து வருகிறோம். பூங்காவிற்கு வரும் சுற் றுலா பயணிகளை மகிழ்விக்க பல் வேறு ஏற்பாடுகள் செய்து வரும் நிலை யில் தமிழ்நாடு அரசும், தோட்டக் கலைத்துறை உயர் அதிகாரிகளும் பூங்கா பணியாளர்களின் கோரிக்கை களை செவி சாய்ப்பதில்லை. இதற்கு  தீர்வு காணவில்லை எனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம், என  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.