districts

img

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குக

 கோவை, நவ.18- வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி சத்து ணவு ஊழியர் சங்க கோவை மாவட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர்  சங்கத்தின் கோவை மாவட்ட பேரவை, ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு ஊழியர் சங்க  அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.என்.ராம சாமி தலைமை ஏற்றார். அரசு  ஊழியர் சங்க மாவட்ட துணைத்த லைவர் எஸ்.எம்.வேலுமணி பேர வையை துவக்கிவைத்து உரை யாற்றினார். செயலாளர் என்.பழ னிச்சாமி வேலை அறிக்கையும், பொருளாளர் பி.சுதா வரவு செலவு  அறிக்கைகளையும் சமர்பித்தனர். பேரவையை வாழ்த்தி, சத்துணவு ஊழியர் சங்க முன்னால் மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமி, மாநிலச்  செயலாளர் ஜெ.நிர்மலா, மாநிலத் துணைத்தலைவர் ஏ.பெரியசாமி ஆகியோர் உரையாற்றினர். இதில், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழக  அரசின் காலை சிற்றுண்டியை சத்து ணவு திட்டத்தின் மூலம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் சத்துணவு  ஊழியர்களுக்கும் 12 மாதம் மகப் பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.  சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவராக, கே.என்.ராம சாமி,  செயலாளராக ஏ.லதா, பொரு ளாளராக ப.சுதா உள்ளிட்ட நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், பி.சுப்பிரமணி நன்றி கூறினார்.  

தருமபுரி

சத்துணவு ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பேரவை கூட்டம்  தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி.காவேரி தலைமை ஏற்றார். சிஐ டியு மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி துவக்கி வைத்தார். செயலாளர் கே.தேவகி வேலை அறிக்கையும், பொருளாளர் பி.வளர்மதி வரவுசெலவு அறிக்கை யும் முன்வைத்தனர். இதில், அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலத்துணைத்தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்டத் தலைவர் எம்.சுருளிந்தான், மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், ஓய்வூதியர் சங்க மாவட்ட செய லாளர் எம்.பெருமாள், சத்துணவு  அங்கன்வாடி ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் இ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.  மாநிலச் செயலாளர் பெ.மகேஸ்வரி நிறைவுரையாற்றினார். முன்னதாக, பணி ஓய்வுபெற்ற  சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட் டத் தலைவர் சி.காவேரி அவர் களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மாவட்டத்  தலைவராக கே.தேவகி, செயலா ளராக ஜே.அனுசுயா, பொருளா ளராக பி.வளர்மதி உள்ளிட்ட நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்டனர்.முடி வில், மாவட்ட துணைத்தலைவர்  ஜே.அனுசுயா நன்றி கூறினார்.தருமபுரி