districts

img

காங்கேயத்தில் இரண்டு பேருந்துகள் ஜப்தி இறக்கி விடப்பட்ட பயணிகள் கடும் அவதி

திருப்பூர், ஜூலை 27 - காங்கேயம் பேருந்து நிலையத்தில் பயணிகளுடன் வந்த இரண்டு அரசுப்  பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். அந்த இரு பேருந்துக ளில் வந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு  மணிக்கணக்கில் மாற்று பேருந்துக்காக  காத்திருக்கும் நிலைக்கு உள்ளாகினர். விபத்து இழப்பீடு வழங்காத கார ணத்தால் அரசுப் பேருந்துகளை ஜப்தி  செய்ய காங்கேயம் சார்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந் நிலையில் புதனன்று காலை கரூரில் இருந்து கோவை செல்லும் ஒரு அரசுப்  பேருந்தும், கோவையில் இருந்து கரூர்  செல்லும் அரசுப் பேருந்து ஒன்றும் காங் கேயம் பேருந்து நிலையத்திற்குள் வந் தன. அப்போது அங்கு வந்த நீதிமன்ற  ஊழியர்கள், சார்பு நீதிமன்ற உத்தர வைக் காட்டி இரண்டு பேருந்துக ளையும் ஜப்தி செய்வதாகத் தெரிவித்த னர். இது குறித்த நோட்டீஸ் அறிவிப்பை யும் பேருந்தின் முகப்பு கண்ணாடியில் ஒட்டினர். இதையடுத்து ஓட்டுநர், நடத் துநர் பேருந்தை விட்டு இறங்கினர்.

பய ணிகளும் இறக்கி விடப்பட்டனர். வழித்தடத்தில் ஓடிக் கொண்டிருந்த  நிலையில் பேருந்துகளை நிறுத்தி ஜப்தி செய்ததால் வெவ்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக பேருந்திலிருந்த பயணி கள் பெரிதும் அவதிப்பட்டனர். அவர்க ளது பயணம் பாதிக்கப்பட்டது. இரண்டு பேருந்துகள் ஜப்தி செய் யப்பட்டு பேருந்து நிலையத்தில் நிறுத் தப்பட்டதாக தெரிந்த நிலையில், அடுத் தடுத்து வந்த  பேருந்துகளும் நிலையத் திற்குள் வராமல் சென்றன. எனவே ஜப்தி பேருந்துகளில் இருந்து இறக்கி விடப்பட்டவர்கள் நீண்ட நேரம் காத்தி ருக்கும் நிலை ஏற்பட்டது. இது போல் பய ணத்தில் இருக்கும் பேருந்தை ஜப்தி  செய்தால் எங்களைப் போன்றவர்கள்  அவதிப்படுவது நீதித்துறைக்கு தெரி யாதா என்று கேட்டனர். அத்துடன் ஜப்தி செய்யக்கூடிய நிலையில் இருக்கும் பேருந்துகளை போக்குவரத்துக் கழ கம் வழித்தடத்தில் இயக்கி எஙகளை  நடுவழியில் இறக்கிவிடச் செய்வது ஏன்?  என்றும் பயணிகள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். பெரும்பாலான பயணிகள் மாற்றுப்  பேருந்து கிடைக்காத நிலையில்  வெளியே சென்று வேறு பேருந்துக ளில் ஏறி மீண்டும் டிக்கெட் எடுத்து பய ணத்தைத் தொடரும் நிலை ஏற்பட் டது.