கோவை, ஜூன் 14 - இருகூர் ரயில் நிலையத்தில் பய ணிகள் ரயில் அனைத்தும் முன்பு போலவே நின்று செல்ல வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இருகூர் ரயில் நிலையத்தில், அடிப்படை கட்டமைப்பு வசதி களை ஏற்படுத்த வேண்டும். பயணி கள் ரயில் கொரோனா காலத்திற்கு முன்பு நின்று சென்றதை போல், மீண்டும் நின்று சென்றிட நடவ டிக்கை எடுக்க வேண்டும். தண்ட வாளங்களை கடந்து செல்கை யில் ஏற்படும் மனித உயிரிழப்பு களை தடுத்திட உயர்மேம்பால நடைமேடை வசதி ஏற்படுத்த வேண்டும். கோவை - மயிலாடு துறை செல்லும் சதாப்தி விரைவு ரயிலுக்கு இருகூர் ரயில் நிலை யத்திலேயே டிக்கெட் எடுக்கும் வசதியை செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி திமுக, சிபிஎம், காங்கிரஸ், மதிமுக, கொமதேக, விசிக உள் ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற் றது. இருகூர் ரயில்நிலையம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட் டத்திற்கு சிபிஎம் கோவை மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினரும், சேலம் கோட்ட ரயில்வே ஆலோ சனை குழு உறுப்பினருமான யு.கே.சிவஞானம் தலைமை தாங்கி னார். இதில், இருகூர் பேரூராட்சி தலைவர் ஏ.சந்திரன், பேரூராட்சி துணை தலைவர் ஜி.ஜெயக்குமார், 14 ஆவது வார்டு உறுப்பினர் இ. கே.சந்திரசேகர், சிபிஎம் 8 ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஸ்டாலின் குமார் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கைகள் குறித்து உரையாற் றினர். இதனைத்தொடர்ந்து அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கைகளை அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உயர் அதி காரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.