திருப்பூர், மார்ச் 21 – திருப்பூர் பழைய பேருந்து நிலை யத்தில் பேருந்துகள் ஒழுங்கில்லா மல், தாறுமாறாக நிறுத்தப்படுவதால் பயணிகள் ஒவ்வொரு நாளும் உயிர் பயத்துடன் ஆபத்தான நிலையில் பேருந்துகளைத் தேடி ஏறிப் பயணிக்கும் நிலை உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ரூ.34.70 கோடியில் சீரமைப்பு பணி கள் நடைபெற்று கடந்த ஆண்டு திறக் கப்பட்டது. ஏற்கெனவே இருந்த பழைய பேருந்து நிலையம் நவீன முறையில் மாற்றி அமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கி றது. ஆனால் வெளிப் பார்வையில் தெரியும் தோற்றத்துக்கும், உள்ளே இருக்கும் நிலைமைக்கும் சம்பந் தமே இல்லை. மிக அலங்கோலமான நிலையில் பேருந்து நிலையம் உள் ளது. பேருந்து நிலையத்தின் மேற்குப் பகுதியில் நகர்ப் பேருந்துகள், கிழக்குப் பகுதியில் வெளியூர் பேருந்துகள் நிறுத்துவதற்கு மேடை கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு தாறுமாறாக பேருந்துகள் நிறுத்தப்படுவதால் எந்த பேருந்து எங்கே நிற்கும், எங்கே வரும் என்று தெரியாமல் பயணிகள் திண்டா டுகின்றனர். பேருந்துகள் தனித்த னியாக நிறுத்தப்படாமல் கலவை யாக நிறுத்தப்பட்டுள்ளதால் வெளி யூர் பயணிகளும், புதிதாக வருவோ ரும் தாங்கள் செல்ல வேண்டிய வழித்தடப் பேருந்து எங்கே என்று தெரியாமல் திணறுகின்றனர். பேருந் துகள் நேரப் பட்டியலும் இல்லை. அத்துடன் பேருந்து நிலையத்தின் வெளிப்புறம் நிறுத்த வேண்டும் என இடம் ஒதுக்கப்பட்ட மினி பேருந்துக ளும் உள்ளேயே நிறுத்தப்படுகின் றன. மினி பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து பேருந்துகளை உட்புறமே நிறுத்துவதாக கூறப்படுகிறது. இத னாலும் குழப்பம் அதிகரிக்கிறது. பேருந்து நிலையத்தின் முகப்புப் பகுதிக்கு வெளியே மிகப்பெரும் இடம் வெற்றிடமாக உள்ளது. அதே சமயம் உள்ளே நெருக்கடி மிகுந்து உள்ளது. வெளியூர் பேருந்துகள், நகரப் பேருந்துகள், மினி பேருந்து கள் என எல்லாம் ஒரே இடத்தில் வந்து செல்வதால் பயணிகள் மிகவும் நெருக்கடியான, சிக்கலான இடத் தில் இங்கும், அங்கும் அலைக்கழிக் கப்படும் நிலை உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விபத்து நடக்கக் கூடும் என்ற உயிருக்கு அச்சுறுத்த லான நிலை உள்ளது. அரசுப் போக்குவரத்து மண்டல வணிக மேலாளரிடம் பேருந்து நிலை யத்தில் ஒழுங்கில்லாமல் பேருந்து கள் நிறுத்தப்படுவது, பயணிகளுக்கு அச்சுறுத்தலான நிலை இருப்பது குறித்து கேட்டபோது, மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறி னார். அதேசமயம் அரசுப் பேருந்து தொழிலாளர்கள் கூறும்போது, திருப் பூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் குளறுபடியை போக்குவரத்துக் கழ கமோ, மாநகராட்சி நிர்வாகமோ ஒழுங்குபடுபடுத்த நடவடிக்கை எடுப் பதில்லை. இதனால் பேருந்து பயணி கள் மட்டுமல்ல, ஓட்டுநர், நடத்துநர்க ளும் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கி றோம் என்று கூறினர். இந்த நெருக்கடி நிலையைப் போக்குவதற்கு நுழைவாயில் முன்பு றம் இருக்கும் காலி இடத்தில் குறிப்பிட்ட வழித்தடப் பேருந்து களை நிறுத்தினால் பயணிகளுக்கு நெருக்கடி குறையும், பாதுகாப்பாக இருக்கும் என்றும் மாற்று யோச னையை நிர்வாகத்திடம் தெரிவித் துள்ளனர். ஆனால் பேருந்து நிலை யத்தில் இருக்கும் கடை வியாபாரி கள் பேருந்துகளை வெளியே நிறுத்தி னால் தங்களுக்கு வியாபாரம் பாதிக் கும் என எதிர்ப்புத் தெரிவிப்பதாக கூறினர். அதேசமயம் வட்டாரப் போக்குவ ரத்து அலுவலகம், அரசுப் பேருந்து நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் என அனைத்து அரசுத் துறைகளும் இப்பி ரச்சனையில் பயணிகளின் நெருக் கடி, உயிருக்கு அச்சுறுத்தலான நிலை பற்றி கவலைப்படாமல் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். எப்போது வேண்டுமானாலும் ஏதேனும் விபரீதம் நேரிட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படக்கூடிய ஆபத்தும் உள்ளது. எனவே முன்கூட் டியே பேருந்து நிலையப் பிரச்சனை யில் உரிய முறையில் தலையிட்டு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் தொடர்புடைய துறையினரை அழைத்துப் பேசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார் க்கின்றனர்.