districts

img

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றுக

 கோவை, டிச.16- சாதிய ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண் டும் என்று வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக  வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சாதிய ஆணவக் கொலைகளைத் தடுக்க ஒன்றிய, மாநில சிறப்பு சட்டம் இயற்ற வேண் டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தொடரும் பாலியல் வன்கொடு மைகளை தடுக்க உறுதியான நடவ டிக்கைகளை எடுக்க வேண்டும். பாலி யல் வன்கொடுமை வழக்குகளை விரை வாக விசாரித்து தண்டனை வழங்க வேண்டும். கோவை மாநகரில் அதிக ரித்து வரும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனக ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாரதி, மாவட்ட நிர்வாகிகள் எம்.விவே கானந்தன், வி.சந்திரசேகரன், அர் ஜுன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டு உரை யாற்றினர்.