கள்ளக்குறிச்சி, ஆக.30- கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனைக்கு முன்னுரிமை அடிப்படை யில் அனைத்து வசதிகளும் பெற்று தரப்படும் என்று சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் தெரி வித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழி குழுவினர் தலைவர் வேல்முருகன் தலைமையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல் முருகன் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் கள்ளக் குறிச்சி அரசு தலைமை மருத்துவ மனையை ரூ.400 கோடியில் தரம் உயர்த்தியுள்ளார். மேலும் மருத்துவ மனைக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டோம். இம் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்நோயாளிகளின் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தோம். அறுவை சிகிச்சை அரங்குகளுக்கு தேவையான உபகரணங்கள் கொள்முதல் செய்யவும், கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசுக்கு எங்கள் குழு பரிந்துரை செய்யும். இம்மருத்துவ மனையில் முன்னுரிமை அடிப்படை யில் அனைத்து வசதிகளும் பெற்று தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பிறகு, கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் புதிதாக உருளை ஒன்று கொள்முதல் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ள தையும் சர்க்கரை ஆலைக்கு தேவைப்படும் வசதிகள் குறித்தும் உறுதிமொழி குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சின்னசேலத்தில் ரூ. 265 லட்சத்தில் நபார்டு நிதியுதவியுடன் தலா 1.000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 கிடங்குகளின் கட்டு மானப் பணிகளை பார்வையிட்டு பணி களை விரைந்து முடிக்கவும் அறி வுறுத்தினார். தொடர்ந்து, தியாகதுருகத்தில் ரூ. 699.82 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள சுற்றுலா மாளிகையின் கட்டுமானப்பணி களையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை தரமாகவும் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையையும் இக்குழு வினர் ஆய்வு செய்தனர். சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதய சூரியன், மணிக்கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன் ராஜ், சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் கருணாநிதி, துணைச் செயலாளர் ஸ்ரீரவி, மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன். கள்ளக்குறிச்சி வரு வாய் கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோக ஜோதி, சட்டமன்றப் பேரவை பிரிவு அலுவலர்கள், உதவி பிரிவு அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.