தருமபுரி, மார்ச் 27- சொத்து தகராறு காரணமாக மகனை ஓடஓட வெட்டிய பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்க ளன்று, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் யாஷ்மின் என்கிற பெண்ணை காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு தேவப்பரியன் (5), பிரகல்யா (1 1/2) வயதில் இரண்டு குழந்தகைள் உள்ளனர். மதம் மாறி திருமணம் செய்ததால் தொடர் பிரச்சனை நீடித்து வந்தது. இந்நிலையில், ஞாயிறன்று எனது வீட்டருகே என்னை, எனது தாய், தந்தை இருவருமே சேர்ந்து மறைத்து வைத் திருந்த அரிவாளால் வெட்டினர். இதனை சற்றும் எதிர் பாரத நான் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றேன். என்னை விடாமல் விரட்டி துரத்திய எனது தந்தை மீண்டும் அரிவாளால் வெட்ட முயன்று தடுமாறி விழுந்தார். வெட்டு காயம்பட்ட நான் தருமபுரி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து, காவல்துறையினர், பிரகாசிடம் பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் ஆட்சியர் அலுவ லகத்திற்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.