திருப்பூர், பிப்.13- காங்கயம் அருகே விபத்தில் சிக்கிய இளைஞருக்கு, தனியார் மருத்துவமனை யில் தவறான சிகிச்சை அளித்ததால் கால் செயலிழந்து துண்டிக்கப்பட்டது. இது தொடர்பாக தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம் குடும்பத் தார் மனு அளித்தனர். காங்கயம் வீரணம்பாளையம் அருகே படியாண்டிபாளையத்தை சேர்ந்த அழகு முத்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காங்கயம் படியூர் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 24 ஆம் தேதி இரவு 10 மணிக்கு எனது மகன் அஜித்குமார் (21), மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் வலது காலில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த வரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக் காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து எங் களது சொந்த விருப்பத்தின் பேரில், காங்க யத்தில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்கு சேர்த்தோம். அங்கு அஜித் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் ஜவ்வு விலகியிருப்பதாக தெரிவித்த னர். தொடர்ந்து, அங்கு 3 நாட்கள் சிகிச் சைக்கு பிறகு, காயம்பட்ட இடத்தில் கட்டு போடப்பட்டது.
இதற்கு சிகிச்சை கட்டண மாக ரூ.22 ஆயிரத்து 540 கட்டினோம். இதன் பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினோம். 5 நாட்களுக்கு பிறகு மருத்துவமனைக்கு வர சொன்னார் கள். எனவே 31ஆம் தேதி மருத்துவம னைக்கு சென்றோம். அப்போது கட்டை பிரித்து பார்த்த போது, கால் அழுகிய நிலை யில் சீழ் பிடித்திருந்தது. இதனால் தவறான சிகிச்சை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்கயம் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தோம். காவல்துறையினர், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினர். இதன் பின் னர் ஈரோடு, தஞ்சாவூர், கோவை என பல் வேறு மருத்துவமனைகளுக்கு சென்றோம். அங்கு பலனின்றி அஜித்குமார் கால் செயல் இழந்ததால், காலின் கீழ் பகுதி அகற்றப்பட் டது. நன்கு வாழ வேண்டிய வயதில், காலின் பகுதி எடுக்கப்பட்டதால், இளைஞரின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. ஆகவே தவறான சிகிச்சை மேற்கொண்ட காங்கயம் தனியார் மருத்துவமனை மீதும், மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் காங் கயம் தாலுகா குழு உறுப்பினர் தங்கவேல், புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி கவி உள்ளிட்டோர் அவரது குடும்பத்தா ருடன் வந்திருந்தனர்.