சேலம், டிச.11- சேலத்தில் வரதட்சணை கொடுமை கார ணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட தாக பெற்றோர்கள் குற்றச்சாட்டி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சிஎச்பி காலனியைச் சேர்ந்த வர் அத்தியப்பன் (50). லாரி ஓட்டுநரான இவ ருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகளான வசுமதி (23) பொறியியல் பட்ட தாரி ஆவார். இவருக்கும் நாமக்கல், நல்லி பாளையம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வினோத் (31) என்பவருக்கும், கடந்த அக்.30 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. இதனிடையே கணவன் – மனைவியிடையே அடிக்கடி பிரச்சனை ஏற் பட்டதாக கூறப்படுகிறது. கடந்த நவ.26 ஆம் தேதியன்று வசுமதி, என்னை வரதட்சணை கொடுமை செய்வதாகவும், நமது குடும் பத்தை பற்றியும், தன்னை பற்றியும் தவறாக பேசுவதாகவும், என்னால் இங்கு வாழ முடி யாது, என்னை வீட்டிற்கு கூட்டிச் செல்லுமாறு வசுமதி தனது பெற்றோரிடம் கூறியுள் ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அத்தி யப்பன், வசுமதியை திருச்செங்கோட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனிடையே, கடந்த நவ.30 ஆம் தேதி யன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வசுமதி தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை மீட்ட பெற்றோர் திருச் செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சனியன்று காலை வசு மதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை யடுத்து அவரது தந்தை அத்தியப்பன் திருச் செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித் துள்ளார். வசுமதியின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக் காக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே வசுமத்தியின் தற்கொ லைக்கு காரணமான கணவன் வினோத், அவ ரது பெற்றோர் சுப்பிரமணி, அமுதா மற்றும் வினோத்தின் தங்கை காவியா ஆகிய நான்கு பேரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வசுமதியின் பெற்றோர் கூறுகையில், திருமணம் ஆன நாளிலிருந்து தங்கள் மகளை கொடுமைப் படுத்தியதாகவும், மகளின் நடத்தை குறித்து ஆபாசமாக பேசியுள்ளனர். மகளை ஆசை ஆசையாக படிக்க வைத்த நிலையில், கண வனின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார், என தெரிவித்த னர். மேலும், உயிரிழந்த வசுமதி, தன் சித்தி யிடம் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், கணவர் வினோத் கடுமையாக பேசி யும், தன்னை பற்றி அவதூறாக திட்டி தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வினோத் மற்றும் அவரது பெற்றோர், சகோதரி ஆகி யோர் மீது காவல் துறையினர், வரதட்சனை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டி யதாக வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர். மேலும், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.