districts

img

கோவை விழா: பழங்கால கார்களின் அணிவகுப்பு

கோவை, ஜன.5- கோவை விழாவையொட்டி பழங்கால கார் கண்காட்சி நடை பெற்றது. இதில், நூற்றுக்கும் மேற் பட்ட பழங்கால கார்கள் காட்சி படுத்தப்பட்டு, அணிவகுத்தன. கோவையின் சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், இந்த ஆண்டு  கோவை விழாவை முன்னிட்டு ரேஸ்கோர்ஸ் சாலையில், உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில், பழங் கால கார் கண்காட்சி நடைபெற் றது. இந்த கண்காட்சியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ் ணன் துவக்கி வைத்தார். கண்காட் சியில் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங் களின் பழங்கால கார்களை காட்சிப் படுத்தினர். சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகை யான கார்கள் முதல் 1995 ஆம்  ஆண்டு வரையுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றது. இதில், பழைய மாடல் பென்ஸ், செவர்லே, ஃபோர்டு, பத்மினி, அம் பாசடர், வோக்ஸ்வேகன், பழைய  ஜீப் உள்ளிட்ட கார்கள் ரேஸ் கோர்ஸ் பகுதியில் வலம் வந்தன. திடீரென பழைய கார்கள் அணி வகுத்து சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். தொடர்ந்து பழங்கால கார்கள் பொதுமக்களின் பார்வைக்காக சில நாட்கள் கோவை லூலூ மால் வளாகத்தில் வைக்கப்படும் என  கோவை விழா ஒருங்கிணைப்பா ளர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று, கோயம்புத்தூர்  விழாவின் ஒரு பகுதியாக, இந்துஸ் தான் கலை மற்றும் அறிவியல் கல் லூரி மைதானத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விளையாட் டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் குண்டு எறிதல், டேபிஸ் டென் னிஸ், ஓட்டப்பந்தயம், பார்வையற் றோர்களுக்கான கால்பந்து போட்டி, போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில்  நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி னர். இந்த நிகழ்வை கோவை (வடக்கு) காவல் துணை ஆணை யர் சந்தீஸ் கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளியின் நிறுவனர் தீபா மோகன்ராஜ் துவக்கி வைத்தனர் இந்நிகழ்வில் கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்ற பல்வேறு வீரர்கள் கலந்து கொண்டு மாற்றுத் திறன் குழந்தைகளை உற்சாகப் படுத்தினர்.