districts

உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு வழங்கிடுக காகித ஆலை தொழிலாளர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் மனு

ஈரோடு, மே 7- உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு கேட்டு காகித ஆலை தொழிலாளர்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டு மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், சத்தி வரு வாய் வட்டம், புதுப்பீர் கடவு கிரா மத்தில் அமைந்துள்ள சாம் டர்போ  இண்டஸ்ட்ரீஸ் என்கிற தனியா ருக்கு சொந்தமான காகித ஆலை இயங்கி வந்தது. இதில் 1995 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தவர் பழனிசாமி. இவரின் தொழிற்சங்க நடவடிக்கையை மனதில் வைத்து 2006 ஆம் ஆண்டு அக்டோம்பர் மாதம் 28  ஆம் தேதியன்று ஆலை நிர்வாகம் இவரை வேலை நீக்கம் செய்தது. பின்னர், பழனிசாமி மற்றும் அவரைப் போல பாதிக்கப்பட்ட மேலும் 10 பேரும் வேலை நீக் கம் செய்ததை எதிர்த்து தொழிலா ளர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆலை நிர்வாகம் 11 பேரை வேலை நீக்கம் செய் தது செல்லத்தக்கதல்ல என்றும்,  வேலை நீக்கத்தை ரத்து செய்து,  சர்வீஸ் தொடர்ச்சியுடன் வேலை யும், வேலை மறுக்கப்பட்ட நாட் களுக்கு முழு பின் சம்பளமும் வழங்க வேண்டும் என தொழிலா ளர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் ஆலை நிர்வாகம் தீர்ப்பை  எதிர்த்து பல்வேறு மேல் முறையீடு கள் செய்தனர். அவைகள் தள்ளு படி செய்யப்பட்டன. இந்நிலையில் மீண்டும் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தை நாடி யபோது ஒவ்வொருவருக்கும் ரூபாய் எட்டு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து ஐநூற்று நான் கும், பைசா ஐம்பது மட்டும் தர வேண்டும் என 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி யன்று காகித ஆலை நிர்வாகத் திற்கு உத்தரவிட்டது. மேலும், சாம்  டர்போ இண்டஸ்ட்ரீஸ் காகித  ஆலை பிரிவு அமைந்துள்ள நிலம்  மற்றும்  கட்டிடங்கள், இயந்திரங் கள், மூலப்பொருட்கள் அனைத் தையும் ஜப்தி செய்து உத்தரவிட் டது. இந்த உத்தரவை மேற்படி ஆலை நிர்வாகத்திற்குத் தெரி வித்தும், ஆலை வாயிற்கதவில் ஜப்தி செய்யப்பட்ட டிகிரி நோட்டீ சும் ஒட்டப்பட்டது. அத்துடன் சத்தி யமங்கலம் சார் பதிவு அலுவலகத் தில் சொத்து குறித்த வில்லங்கத் தில் பதிவும் செய்யப்பட்டது.

இதன்பின்பும், காகித ஆலை நிர்வாகம் சேலம் தொழிலாளர் நீதி மன்ற தீர்ப்பினை அமலாக்காமல்,  கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆலையை மூடிவிட்டது. இதனால்  100க்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் வேலையிழந்து, வருவாய் இழந்து மிகுந்த துயரமான நிலை யில் உள்ளனர். இந்நிலையில் தனி யார் நிறுவனத்திற்கு கடன் கொடுத்த பாரத ஸ்டேட் வங்கி, (அவிநாசி ரோடு கிளை, கோவை)  சாம் டர்போ பேப்பர் மில்லிற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களை யும் விற்பனை செய்வதாக நாளித ழில் விளம்பரம் வெளியிட்டது. அத னையறிந்த தொழிலாளர்கள் தங்க ளுக்கு பாத்தியப்பட்ட சர்வே எண். 380/1, 380/2 இன் அடிநிலம் மற் றும் அசையும் சொத்துக்களை விற் பனை செய்வதற்கு உரிமை யில்லை என  வங்கி கிளைக்கு தங் களது ஆட்சேபணையை தெரிவித் தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சி யரிடமும் முறையிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் மாவட்ட முதன்மை வங்கியான கனரா வங் கியின் மேலாளர் மூலம் நடவ டிக்கை எடுக்க பரிந்துரைத்தார். இதற்கிடையில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் சொந்தமான சொத்துக்களை கோவையைச் சேர்ந்த எஸ்.எஸ்.ஆர் நிறுவனமா னது அரசியல் மற்றும் ஆள்பலத்து டன் அபகரிக்க முயற்சி செய்து  வருகிறது. இதனால் தங்களது  உயிர், உடமைக்கு பாதுகாப்பற்ற  நிலை உருவாகியுள்ளது என  மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் சனியன்று முறையிட்டு மனு அளித்தனர்.