சேலம், ஜூலை 23- கிராம ஊராட்சி செயலாளர்க ளுக்கு இளநிலை உதவியாளர்க ளுக்கான ஊதியம் கருவூலம் மூலம் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட 6 ஆவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட மாநாடு சேலம் மாநகராட்சி பல்நோக்கு அரங்கத்தில் பா.வாசு தேவன் நினைவரங்கத்தில் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்ட தலை வர் பி.ஜே.கண்ணன் தலைமை தாங் கினார். மாநாட்டில் சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் இரா.ராஜேந்தி ரன், சேலம் கூடுதல் ஆட்சியர் சி. பாலச்சந்தர் ஐஏஎஸ் ஆகியோர் உரையாற்றினர். வேலை அறிக் கையை மாவட்ட செயலாளர் தா. ஜான் ஆன்ஸ்டீன், நிதிநிலை அறிக் கையை பொருளாளர் கோவிந்த ராஜ் ஆகியோர் முன்வைத்தனர். இதில் வருவாய் துறை அலுவ லர் சங்க மாநிலத் துணைத் தலைவர் அர்த்தனாரி, ஊரக வளர்ச்சி ஓய்வு பெற்ற சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இரா.ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். இதில், கிராம ஊராட்சி செயலா ளர்களுக்கு இளநிலை உதவியா ளர்களுக்கான ஊதியம் கருவூலம் மூலமாக வழங்கிட வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட் டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சிகளுக்கு மேல் உள்ள ஓம லூர் அயோத்தியாபட்டினம் தலை வாசல் பெத்தநாயக்கன்பாளையம் சங்ககிரி வீரபாண்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய கலை நிர்வாக வச திக்காக இரண்டாக பிரிக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. மாநாட்டில், தலைவராக பி.ஜே. கண்ணன், செயலாளராக த.ஜான் ஆன்ஸ்டீன், பொருளாளராக ரா. கேசவன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.