திருப்பூர், அக். 5- ஊராட்சி நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதிகளின் குடும்ப உறுப்பி னர்கள் தலையிட மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்துள்ளாரா? என்று ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டப் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப் பாளர் இரா.சதீஷ்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது: ஊராட்சி நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதிகளின் குடும்ப உறுப்பினர்கள் தலையிடுவதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக பொங்கு பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து மக்கள் முன்னிலையிலும் கிராம சபையின் பொறுப்பாளர் என்ற முறையில் தெரிவித்துள்ளார். ஊராட்சி நிர்வாகத்திலும் மற்றும் எந்தெந்த பணிகளுக்கெல்லாம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி தலைவர் மற்றும் உறுப் பினர்களின் குடும்ப உறுப்பினர்கள் தலையிடலாம் என்ற ஆதாரத்தை வெளியிட்டால் அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வசதி யாக இருக்கும். மேலும் ஊராட்சி களின் ஆய்வாளர் என்ற நிலையி லுள்ள மாவட்ட ஆட்சியர் சட்டத்தில் உள்ளதை மீறி செயல்பட்டுள் ளாரா? என்பது தெரியவில்லை. சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதில் பொறுப்புடைய மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி நிர்வா கத்தில் தேர்வு செய்யப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் தலை யிட்டு நிர்வாகத்தையே சீரழித்து வருகின்றனர் என்பதை பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தொடர் புகார்களில் அறிந்திருப்பார். மேலும் ஊராட்சி நிர்வாகத்திலும், குடிநீர் விநியோகம், குடிநீர் குழாய் ஒப்பந்தம் என பல்வேறு பணிகளுக்கு பிரதிநிதிகளின் குடும்ப உறுப்பினர்கள் தலையிட எந்த சட்டம் அனுமதித்துள்ளது என்பதை உரியவர்கள் ஆதாரத்துடன் தெளிவு படுத்த வேண்டும். பொங்குபாளையம் ஊராட்சி நிர்வாகத்தில் பெண் பிரதிநிதிகளின் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு அதிகம் உள்ளதை புகாராக பதிவு செய்துள்ளோம். அதன் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.