திருப்பூர், செப். 15 - ஊராட்சிகளில் 2020ஆம் ஆண் டுக்கு முன்பு வரை உள்ள மின் கட்டணம், குடிநீர் கட்டணம் பாக்கிகளைச் செலுத்த, தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக் கீடு செய்ய வேண்டும் என்று திருப்பூர் ஒன்றிய ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள் ளது. திருப்பூர் ஒன்றிய கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டம் வெள் ளியன்று கணக்கம்பாளையத்தில் நடை பெற்றது. இதில் கூட்டமைப்பின் தலை வர் கே.கணேசன் தலைமை ஏற்றார். கணக்கம்பாளையம் ஊராட்சி தலைவர் சண்முகசுந்தரம், மங்கலம் ஊராட்சி தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, முதலிபா ளையம் ஊராட்சி தலைவர் மயூரி பிரியா, வள்ளிபுரம் ஊராட்சி மன்ற தலை வர் முருகேசன், பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, பொங்குபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா, தொரவலூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவகி, காளிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஊராட்சிகளில் 15 ஆவது நிதிக்குழு மானியம் 2023 - 24 -ஆம் ஆண்டுக்கான நிதியில், பொது மக்களின் சிரமத்தை போக்கும் வகை யில் அத்தியாவசிய பணிகளைச் செய்வ தற்கான தீர்மானங்கள் நிறைவேற்றி கொடுக்கப்பட்டன. எனினும் இந்த பணி கள் நடைபெற காலதாமதம் ஆவதால் மக்களின் சிரமம் தொடர்கிறது. எனவே பிரச்சனையை தீர்க்கும் வகையில் உட னடியாக அனைத்து ஊராட்சிகளிலும் இந்த பணிகள் நடைபெற நிர்வாக அனு மதி வழங்க வேண்டும், ஊராட்சி களுக்கு வழங்க வேண்டிய வீட்டு வரன் முறை கட்டிட நிதியை உடனடியாக வழங்க வேண்டும், கழிவுநீர் கால்வாய் களை பொது வாய்க்கால் போன்ற இடங்களில் கொண்டு போய் சேர்ப்ப தால், அதையொட்டி வரும் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு நிதிச் சுமையும், வேலை பளுவும் ஏற்படுகிறது. அதைப் போக் கும் வகையில், தூய்மை பாரத இயக் கத்தின் நிதி மூலம் கழிவுநீரை சுத்தி கரிக்க உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும், 2020ஆம் ஆண்டிற்கு முன்பு வரை ஊராட்சிகளில் உள்ள மின் கட்டண மற்றும் குடிநீர் கட்டண பாக்கிகளை அரசு சிறப்பு நிதி ஒதுக்கி நிலுவை உள்ள பாக்கி தொகைகளை செலுத்த வேண் டும், ஊராட்சி பகுதிகளில் சேரும் அனைத்து கழிவுகளையும் மாசுக்கட் டுப்பாட்டு நிர்வாகத்தின் விதிகளுக்கு உட்பட்டு எரிக்கக்கூடிய இயந்திரம் வாங்க எஸ்பிஎம் திட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கி தர வேண்டும், அனைத்து ஊராட்சி செயலர்களை சுழற்சி முறை யில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். மக்கள் தொகை அடிப் படையில் தூய்மை பணியாளர்கள், குடி நீர் பணியாளர்கள் தூய்மை காவலர் களை கூடுதலாக நியமிக்க அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். இந்த கோரிக்கைகள் குறித்து அனைத்து ஊராட்சி மன்ற தலை வர்களும் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து நிறைவேற்றித் தர வலியு றுத்தவும் முடிவு செய்துள்ளனர்.