districts

img

கோவில் நிலத்தை ஆக்கிரமித்த ஊராட்சி தலைவர், வருவாய் துறையினர்

சேலம், ஏப்.28- வாழப்பாடி அருகே உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஊராட்சி தலைவர் மற்றும்  வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் சங்கத்தி னர் ஆவேசமிகு போராட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், வாழப் பாடி அருகே உள்ள பெரிய குட்டிமேடு கோவில் அனு பவ நிலத்தில், ஊராட்சி தலைவர், வரு வாய் துறையினர் சிலர் இணைந்து கொட் டாய் போட்டும், வீட்டுமனைகள் போட்டு விற்க முயன்றனர். இந்நிலையில், கோவில்  நில ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற  வேண்டும். கோவில் அனுபவ நிலம் இரண் டரை ஏக்கரை பாதுகாத்து, நூறாண்டாக  இருந்த மாதிரியே பராமரிக்க வேண்டும் என  வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்வப இடத்திற்கு வந்த வட்டாட்சியர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டார். அப்போது வட் டாட்சியர் பேசுகையில்,

அங்கு கோவில் நிலம் என எதுவும் இல்லை. எனவே, அது  கோவில் நிலம் தான் என்று ஆதாரம் இருந் தால் தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு ஆதாரவாக பேசிய தாக கூறப்படுகிறது. இதனால் மேலும் ஆவேசமடைந்த விவசாயிகள் 100 ஆண்டு களுக்கு மேலாக கோவில் அனுபவத்தில் இருந்த நிலம், தற்போது ஆக்கிரமிக்கப்பட் டுள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவ டிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட் டங்களில் ஈடுபடுவோம் எனக்கூறி காத்தி ருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட் டாட்சியர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித் ததைத் தொடர்ந்து விவசாயிகள் அனை வரும் கலைந்து சென்றனர். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் ஏ.ராமமூர்த்தி, துணைத் தலைவர் பி.தங்கவேலு, மாவட்ட பொருளாளர் ஏ. அன்பழகன், வட்ட தலைவர் சீனிவாசன், செயலாளர் சுப்ரமணி, மார்க்சிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் வி.தங்கவேல் உட்பட  200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.