தருமபுரி ஜூன் 12- தருமபுரி, கோம்பை கிராமமக்கள் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பாளையம்புதூர் ஊராட்சி மன்ற அலுவ லகத்தை முற்றுகையிட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கோம்பை கிரா மத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற னர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடி நீர் வழங்கவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலை யில், பள்ளி குழந்தைகள் கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள், சமையல் செய்வதற்கு, குளிப்பதற்கும், குடிப்பதற்கும் தண் ணீர் இல்லை. இக்கிராமத்தில் உள்ளவர்கள் விவசாய கிணறு களுக்கு சென்று சில கிலோ மீட்டர் நடந்து குடிநீர் எடுத்து வரு கின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறை யிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், ஆவேச மடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், பள்ளிக்கு செல் லும் சிறுவர்களுடன் திங்களன்று பாளையம்புதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையறிந்த, ஊராட்சி மன்ற தலைவர் பொது மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வார காலத்தில் குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கிறேன், என ஊராட்சி மன்ற தலைவர் உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.