districts

img

பிளாஸ்டிக் குப்பையிலிருந்து பேருந்து நிழற்குடை

கோவை, நவ.14- கிட்டாம்பாளையம் ஊராட்சி யில் பிளாஸ்டிக் குப்பைகளை மறு சுழற்சி செய்து, அழகான நிழற் குடை அமைக்கப்பட்டுள்ளது. இது  குப்பைகளை முறையாக மேலாண்மை செய்வதற்கான ஒரு  முன்னோடி முயற்சியாக பாராட்டப் படுகிறது. கோவை மாவட்டம், சூலூர்  ஒன்றியம் கிட்டாம்பாளையம் ஊராட்சியில் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு தினமும் 600 கிலோ குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில், 200  கிலோ குப்பை பிளாஸ்டிக்காக உள் ளது. இந்த பிளாஸ்டிக் குப்பை களை வீணாக்காமல், மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில், ஊராட்சி நிர்வாகம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் சேகரித்த  2 டன் பிளாஸ்டிக் குப்பைகளை  ஒரு தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது. அந்த நிறுவ னம், இந்த குப்பைகளை மறுசுழற்சி  செய்து, சிமென்ட் ஷீட் போன்ற ஷீட் கள், பக்கவாட்டு சுவர்களுக்கான கனமான ஷீட்கள், தரையில் பதிக்க  பேவர் பிளாக் போன்ற கற்கள்,  இருக்கைகளுக்கான சீட்கள் என  பல வகையான பொருட்களை தயா ரித்தது. இந்த பொருட்களை கொண்டு, கிட்டாம்பாளையம் நால்  ரோட்டில் ஒரு அழகான நிழற்குடை  அமைக்கப்பட்டது. இதுகுறித்து கிட்டாம்பாளை யம் ஊராட்சித் தலைவர் சந்திர சேகர் கூறுகையில், பிளாஸ்டிக் குப் பைகள் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி  வரும் நிலையில், இந்த முயற்சி  மூலம், எங்களது கிராமத்தில் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு  குறைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாது காப்பை நிர்வகிக்க முடிகிறது. இம் முயற்சி, பொதுமக்களிடையே மறு சுழற்சியின் முக்கியத்துவத்தை பரப்பும் என்று நம்புகிறோம். மறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு பொது இடங்களில்  வசதிகளை ஏற்படுத்துவது, பொது சொத்துக்களை மேம்படுத்துவதற் கான ஒரு முயற்சியாக இந்தத் திட்டத்தை முன்னெடுத்தோம். இம் முயற்சியில் பொதுமக்களின் பங்க ளிப்பு மிகவும் முக்கியமானது.  பொதுமக்கள், மக்கும் குப்பை மற் றும் மக்காத குப்பையை தரம்  பிரித்து கொடுப்பதில் எங்களது  கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்  நல்ல பங்களிப்பை கொடுத்து வரு கிறார்கள். தனியார் நிறுவனங்கள், மறுசுழற்சி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பிளாஸ்டிக் குப்பை களை மதிப்பு மிக்க பொருட்களாக  மாற்ற வேண்டும். கிட்டாம்பாளையம் ஊராட்சி யின் இந்த முயற்சி, பிற ஊராட்சி களுக்கும் ஒரு முன்மாதிரியாக  அமையும் என்று நம்புகிறோம்.  இந்த முயற்சியின் வெற்றி, குப்பை  மேலாண்மையில் ஒரு புதிய அத்தி யாயத்தை எழுதும் என தெரிவித் தார்.