districts

img

பஞ்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, அக்.10- பஞ்சாலை தொழிலாளர்களுக்கு போனஸ் ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தி சிஐடியு தருமபுரி டிஸ்ட்ரிக் டெக்ஸ்டைல்ஸ் மில் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2022-23 ஆண்டிற்குரிய போனஸ் 20 சதவிகிதமும், ஊக்கத் தொகை 10 சதவிகிதமும் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கும், வருங்கால வைப்பு நிதிக்கும் பிடிக் கப்பட்ட தொகைகளை மாதந்தோறும் உரிய அலுவலகங்க ளில் செலுத்தி தொழிலாளர்களுக்குரிய பலன்களை கிடைக் கச் செய்ய வேண்டும். பஞ்சாலைகளில் பணிபுரியும் தினக் கூலி தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.512க்கு ஊதி யம் வழங்க வேண்டும். 20 ஆண்டுகளாக மாநில அளவில் ஊதிய உயர்வு இல்லாத பஞ்சாலைத் தொழிலாளர்கள் அனை வருக்கும் குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி டிஸ்ட்ரிக்  டெக்ஸ்டைல்ஸ் மில் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.கண்ணதாசன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்ட துணைத் தலைவர் பி.ஆறுமுகம், சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் உட் பட பலர் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.