கோவை, ஏப்.22– பஞ்சாலை மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் அகில இந்திய மாநாடு கோவையில் நடைபெற உள் ளது. இதனைத்தொடர்ந்து வரவேற் புக்குழு அமைப்புக்கூட்டம் கோவை யில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், சிஐடியு மாநில செயலாளர் சந்தி ரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற னர். இதுகுறித்து சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஞ்சாலை மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் அகில இந்திய மாநாடு கோவையில் நடைபெறுவதை யொட்டி இந்த இரண்டு சங்கங்களின் மாநில சம்மேளன கூட்டங்கள் தனித் தனியாக நடைபெற்றது. இதில், மே 17 ஆம் தேதி பஞ்சாலைகள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் தேசிய மாநாடு கோவை மசக்காளிபாளையம் ஹர்ஷா மஹாலில் சிறப்பாக நடத்து வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த அகில இந்திய மாநாட்டில் சிஐ டியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா , அகில இந்திய உதவி தலைவர் ஏ.கே.பத்மநாபன், தேசிய செயலாளர் ஆர். கருமலையான், சிஐ டியு மாநில செயலாளர் ஜி.சுகுமாறன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இம்மாநாட்டில் முதல் நிகழ்வு தியா கிகள் நினைவாக ஜோதி கொண்டு வரு தல், மாநாடு கொடியேற்றம், வரவேற் புரை துவக்க உரை, பொது மாநாடு, பிரதிநிதிகள் மாநாடு என மாநாட்டை சிறப்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக மாநாட்டிற்கான வரவேற் புக்குழு அமைக்கப்பட்டது. வரவேற் புக்குழு தலைவராக சி.பத்மநாபன், செயலாளராக எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக பி.முத்துச்சாமி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். உதவி தலைவர்களாக, உதவி செயலாளர்க ளாக 20 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரி வித்துள்ளனர்.