பஞ்ச சித்ரா ஓவிய அகாடமி யில் சாதா ரண மாணவர்களையும் சாதனையாளராக மாற் றும் ஓவியக் கலைஞர் பருதிஞானம். தஞ்சை மாவட்டம், பருத்திக்கோட் டையில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து ஓவியத்துறையில் காலடி எடுத்து வைத்து பரி மானம் அடைந்த இவர் சென்னை ஓவியக்கல்லூரியில் சிறந்த மாணவருக்கான விருதை பெற்றவர். லெஜன்ட் ஆப் புத்தா ஆஸ்கர் லேமினேசன் 20 - அனிமேஷன் படங்கள், கடோத்கஜா அனிமேஷன் படம் மற்றும் சிங்கீதம் சீனிவாசராவ் படத்துக்கு ஆர்ட் டைரக்டர், கேன்ஸ் - நாமினேஷன் 60க்கும் அதிகமான அனிமேஷன் சீரியல்கள், அமெரிக்காவின் பி.கே.என்.டி.வி. நிறுவ னத்திற்கும், ஜெர்மனியின் பெண்டா டிவி நிறுவனத் திற்கும் ஆர்ட் டைரக்டர் மற்றும் பஞ்சதந்திரக் கதை களை தூர்தர்ஷனுக்கு வரைந்து கொடுத்தவர் என்ற பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் இவர்.
கோவை அருகே உள்ள வடவள்ளியில் இடையர் பாளையம் சாலையில் உள்ள இ.பி.காலனியில் பஞ்ச சித்ரா என்ற பெயரில் பருதிஞானம் ஓவிய அகாடமி பள்ளி நடத்தி வருகிறார். இங்கு 4 வயது முதல் 11 வயது வரை உள்ளவர்களுக்கு வார இறுதி நாட்க ளில் ஓவியப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவரது முதல் மாணவன் சஞ்சய், என்.ஐ.டி. தேர்வில் இந்தியா அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மற்றொரு மாணவன் யஷ்வந்த் அமெரிக்காவின் ஏ.யூ.பி.யூ.எம் ஆர்க்கி டெக் யுனிவர்சிட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2டி, 3டி, டிஜிட் டல் போன்ற துறைகளில் மிகவும் சிறப்பான சாத னையை படைத்து பல நாடுகளில் லட்சக்கணக்கில் ஊதியம் பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்நிறுவனத்தின் இரண்டாவது கிளை சாய்பாபா காலனியில் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பள்ளியின் நிறுவனர் பருதி ஞானம் கூறியதாவது, பஞ்சசித்ரா ஓவிய அகாடமி யில் பாரம்பரியமும், நவீனமும் இணைந்த முறையில் ஓவியக்கலை பயிற்றுவிக்கப்படுகிறது. ஓவியம் என்பது தமிழை எப்படி பேசுகிறோமோ அதைப் போலத்தான், ஓவியப் பயிற்சியில் 5 வயது முதல் 7 வயது வரை உள்ளவர்கள் ஒவியப் பயிற்சி எடுத்து வருகிறார்கள். விசுவல் - துறைக்குச் சம்பந்தமான எல்லா அடிப்படை ரகசியங்களையும் மேனுவலாக வும், டிஜிட்டலாகவும் பயிற்சி கொடுத்து வருகிறேன். ஒருகோடு போடத்தெரிந்தாலே போதும் ஓவிய கலை ஞனாக முடியும் என்கிறார்.