districts

img

பனங்கருப்பட்டி உற்பத்தி தீவிரம்: உரிய விலை நிர்ணயம் செய்திடுக

கோபி, பிப். 28- கோடை வெயில் தொடங்கி யுள்ளதால் கோபிசெட்டிபாளை யம் சிறுவலூர் சுற்றுபுற பகுதிகளில் பனைமரங்களில் கருப்பட்டி உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், உரிய விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்  என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.  ஈரோடுமாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள சிறுவ லூர் பகுதிகளான பதிபாளையம், ஆயிபாளையம், மீன்கிணறு, கரிச்சிபாளையம், காட்டுசாலை, உள்ளிட்ட பகுதியில் 300க்கும்  மேற்பட்ட பனைமர தொழிலாளர் கள் உள்ளனர். இவர்கள் தென்னை மற்றும் பனங்கருப்பட்டி உற்பத்தி செய்து வருகின்றனர். தற்போது கோடை தொடங்கியுள்ளதால் சிறு வலூர் சுற்றுபுற பகுதிகளில் பனை மரங்களில் கருப்பட்டி உற்பத்தியா ளர்கள் பதநீர் இறக்கி பனங்கருப் பட்டியை உற்பத்தியை தீவிரப்படுத் தியுள்ளனர்.  தொடக்கத்தில் குறைந்தளவு பதநீரை கொண்டு பனங்கருப்பட் டியை உற்பத்தியை தொடங்கி யுள்ளதால், பனங்கருப்பட்டி கூட்டு றவு சங்களில் பனங்கருப்பட்டி கிலோ ஒன்றுக்கு ரூ.190 முதல்  ரூ.200 வரை விற்பனை ஆகிறது.  இதனால் பனை மரதொழிலா ளர்கள் மற்றும் பனங்கருப்பட்டி உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து பனங்கருப்பட்டி உற்பத்தியாளர்கள் கூறுகையில், வரும் நாட்களில் பனை மரங்க ளில் கூடுதலாக பதநீர் கிடைக்கும் போது நாளொன்றுக்கு 20 கிலோ  வரை 50 நாட்களுக்கு பனங்கருப் பட்டி உற்பத்தி செய்ய முடியும்.  இயற்கை முறையில் மருத்துவ  குணம் நிறைந்த பனங்கருப்பட் டியாக உற்பத்தி மேற்கொண்டி ருக்கிறோம். தற்போதைய சூழலில் பனங்கருப்பட்டி உற்பத்தி  செய்ய எதிர்பார்த்த விலை இல்லை  என்பதால் பனை தொழிலாளர்கள் மற்றும் பனங்கருப்பட்டி உற்பத்தி யாளர்கள் மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். கலப்படமின்றி இயற்கை முறை யில் உற்பத்தி செய்யும் பனங்கருப் பட்டிக்கு பொதுமக்களிடையே வரவேற்பு உள்ளது. ஆனால்,  உற்பத்தி செய்யும் பனங்கருப்பட் டியை வியாபாரிகள் வீடுகளுக்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்வதாலும் சில்லரை வியாபா ரிகள் அதிகமானதால் கூட்டுறவு பனங்கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்திற்கு வரத்து குறைவாக  உள்ளது. கூட்டுறவு சங்கங்கள்  விலை நிர்ணயம் செய்ய முடி யாத நிலையில், வியாபாரிகள் நிர்ணயம் செய்யும் விலை மட்டுமே  தொடர்கிறது. இதனால், தற்போது குறைந்த தொழிலாளர்கள் தர மான முறையில் கலப்படமின்றி பனங்கருப்பட்டிகளை உற்பத்தி செய்து வருகின்றனர். எனவே, பனங்கருப்பட்டிக்கு கிலோ ரூ.250க்கு அரசு உரிய விலை நிர் ணயம் செய்து கூட்டுறவு அங்கா டிகளில் விற்பனை செய்ய வேண்டும் என்றனர்.