கோபி, ஜன.2 - கோபியில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15ஆவது ஊதிய உயர்வை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கான அகவிலைப்படி உயர்த்த வேண்டும். வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதிய பலன் களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜன.5ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலை நிறுத்தம் குறித்து பொதுமக்களுக்கு தெரியபடுத்தும் வகை யில், பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரங்களை, தொழிற் சங்க கூட்டமைப்பினர் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையத்தில் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், கோபி பேருந்து நிலையம், கச்சேரிமேடு, தினசரி சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் போக்குவரத்து தொழிற்சங்க கூட்ட மைப்பின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.